Monday, May 31, 2010

கருவாட்டு மனிதன்

வேகாத வெய்யிலில்
வேகும் மனிதர்
சாயாத பொழுதில்
சாலையில் விளிம்பில்
சாரியாக

தம் பசி போக்க
நுங்கு விற்கிறார்
வெள்ளரியும் சேர்த்து
தம் பிழைப்பு கூடையுடன்
விரையும் மனிதரை
கூவி அழைத்து

வேகாத பொழுதில்
எரியும் தணலில்
தம் உடலும் சேர்த்து
எரிய

கரிய மேனியும்
மேலும் கருத்திட
வியர்வை வழிந்தோட

குடை பிடித்து விற்கலாமே!
நிழலில் சென்று விற்கலாமே!

"பச்சு காரனே ஏத்த மாட்டறான்,
பொழப்புக்கு என்ன செய்ய"

No comments: