ஏதாவது 'இசம்', இதற்குள் அடங்கி அல்லது முடங்கி போகிறோம்.ஆரம்பம் முதல், அடுத்தடுத்து தெளிவாகிறோம் என்ற சமைவு, சமாதானம் ஒரு புறம் இருக்க, நம்மை அறியாது ஒரு சுழற்ச்சியில் பயணிக்கிறோம்.
அப்போதைய புரிதல் அளவறிந்து, மறுமுறையும், 'கொள்கை', 'கோட்பாடு','தத்துவம்' என்கின்ற சொல்லாடல்களுக்குள் சுகமாக. இப்படியே கழிந்துவிடும் வாழ்க்கை. ஈடேறாத எண்ணங்களின் சுமையில்.நிறைவற்ற மனம் நிலைகுலையும்.
சிற்சில இடர்களும், சலனங்களும் அழுத்த விசையுடன் ஆர்ப்பரிக்கும் எண்ணக்கடலில். சூறாவளியாக சில காலம் கலங்கி, கலக்கி, பேரிரைச்சல் பேரிகையுடன். மின்னல், இடி முழக்கங்களுடன், சமநிலை அடைய தத்தளிக்கும், தவிக்கும்.
இயற்கையின் இயக்கவியல் துணை நிற்க, அமைதி வாரியாகும் பட்டறிவு பகலவன் வெளிச்சத்தில்.இருளகன்று, மருள் விலகி, இன்பம் பயக்கும்.
மனித மனத்தின் பரிமாண புலப்பாடோ?
No comments:
Post a Comment