"கந்தை குறித்து கவலையில்லை
சந்தை குறித்தே கவலை"
சந்ததி குறித்து கவலையில்லை
சந்தை கதி குறித்தே கவலை.
சந்தை வளர்ந்திட சந்தம் பாடுவோம்
எல்லைகளை கடந்து காவடி எடுப்போம்,
சிந்து பாடுவோம்.
எட்டிப் பார்ப்போம்
கட்டிச் சேர்ப்போம்,
கடன் பெறுவோம்.
கொட்டிக் கொடுப்போம்
உழைப்பை,
உரிமையை,
ஆதாரங்களை.
எதிலும் வியாபாரம்,
பருப்பிலும், வெறுப்பிலும்.
இருக்கும் போதும் வணிகம்
இறக்கும் போதும் வணிகம்..............
No comments:
Post a Comment