Monday, November 19, 2018

அவன் படகு

 கவிஞர்.கெலஸ் வெலெரியஸ் கெட்டுல்லஸ்

நீங்கள் காணும் இப் படகு, நண்பர்களே!
 மிக விரைவான கலம் என்று கூறிடும்,
பாய்மரமோ அன்றி துடுப்பு உழைப்பில் செலுத்தப்படுவதோ,
வேகத்தில் எதுவும்  அறைகூவல் விடுக்க இயலாது,

அச்சுறுத்தம் அட்ரியாட்டிக் கடற்கரை,
சைக்கிளடாசு தீவுகளோ, பெருமை மிகு ரோட்ஸ்,
அன்றி அச்சம் தரும்
போசுபரஸ் தீவுகளோ, கருங்கடற்கரையின் சோகமான விரிகுடாவோ,
அதனை மறுக்க இயலா,

படகாவதற்கு முன், இலைகள் அடர்ந்த காட்டு மரமாக:
சைடோரஸ் சிகரங்களில், அடிக்கடி இலைகளின் இரகசியங்களுக்கு
ஓசை கூட்டி,
இவைகள் உமக்கு நன்கு புரியும்,
அமஸ்டிரிஸ், மற்றும் அடர் மரங்கள் போர்த்திய சைடோரஸ்
அறிந்திடும்:

ஆரம்பத்திலிருந்து உமது மலைச் சரிவில் நின்று,
அதன் தழும்புகள் உமது நீரில் தோய்ந்து,
உரிமையாளரைக் கடந்து, பல தலைகனம் உடைய தடைகளையும் தாண்டி,

வீசும் காற்று படகின் வலப்புறம் அன்றி இடப்புறம் கூவியதோ,
அல்லது பெருஞ்சுழற்காற்று  அடுக்கிடையீட்டுத் தகடுகளை,
 பதம் பார்த்ததோ
 ஒரு பக்கத்தில், மறு பக்கத்தில், முழுவதுமாக:

கடற்கரை வதியும் தெய்வங்களுக்கு படையல்
 செய்திடவில்லை,,
அயல் தேசக் கடலிலிருந்து,
தெளிவான ஏரிக்கு வருகை தந்தபோது.

இவையாவும் கடந்த காலம்:இங்கு
மறைவிற்குள்,
அமைதியாக வயதாகிக் கொண்டிருக்கும்,
தன்னையே, காஸ்டர் மற்றும் சகோதரருக்கு- சுவர்க்க இரட்டையருக்கு- அளிக்கிறது.

(எமது மொழியாக்கத்தில்)

No comments: