Thursday, July 14, 2011

அழுத நிலை!

ஆய்விற்கு அளிப்போம்
வீட்டிற்கு ஏன்
எடுத்துச் செல்ல வேண்டும்!

இப்படியே விட்டுச் செல்வாயா!
இறுதிச் சடங்கும்
இல்லை என்று
செல்வாயா!

ஈர்ப்பில் எங்களை இழுத்து
புது வார்ப்பில்
சென்றாயே!

பிறப்பின் வயதும்
இறப்பின் வயதும் ஒன்றாக
தாய்ப்பால் குடித்திட
தவித்த
உம் வாய்!

தளிர் உடல் நசுங்கிட
இடுகாட்டு
இல்லத்தில்
பசும்பால் வாங்கிச் சென்றாய்!

பரிதவித்தோம் நாங்கள்!
அழுத்தம் யாவும் பீறிட
அழுகையாய்
நீர் வழிந்திட
தேம்பி அழுத நிலை!

No comments: