Saturday, July 16, 2011

இலவம்!

பூத்தேன்,
பூத்து காய்த்தேன்,
காய்த்து குலுங்கினேன்
மகிழ்ச்சியாக.

என் உடலெல்லாம்உற்சாகம்!
முதிர்ந்தேன்!
அறுவடைக்கு தயாராக
ஆள் இல்லை!

வெம்பினேன்,
வெடித்தேன்!
வெறுப்புடன்! பொறுப்புடன்!

வெள்ளுடை தரித்தேன்!
வெளிக் கிளம்பினேன்!
வானத்தின்
வெண் பனியாக!

ஊரெங்கும்பறந்தேன்!
சிறுவர் விளையாட்டு
குமிழியாக!

செய்யிழை வேண்டுபவர்
மெய்யிழை மறந்ததால்!

No comments: