"கல்விக் கண் கொடுத்த காமராசர்"
ஐயா!
கொடுத்த கண் படுத்துக் கொண்டது,
பஞ்சடைந்து விட்டது
பழுதடைந்து விட்டது.
'ஆடி' கொடு
ஆடியில்!
அணிந்து கொள்ள!
ஒளி மங்கிய கல்வி
கோருகிறது உம்மிடம்
பார்வை!
சோடா புட்டியானாலும்
பராவாயில்லை!
சோதனை தீர!
உம் பிறந்த நாளில்
பெருமை கூற!
கல்விக் கண்ணா?
குருடாயிருந்த கல்வி
குவலை விழி
குவலயம் நோக்கி!
பெற்றது உம்மால்!
நெருடான எண்ணம்
நேரிய வழி சென்றது!
உடல் பசி தீர உணவு!
உடுக்க சீருடை!
புத்தகம் இலவசம்!
இன்றும் தொடர்கிறது
இத்யாதி!
இருப்பினும்
இரு விழிகளில் பிறை நோய்!
அறுவை சிகிச்சை அவசியம்!
இப் பிறந்த நாளில்
பரிசோதனை தேவை
உடனடியாக விழிகளைக் காத்திட!
பார்வையை சேர்த்திட!
No comments:
Post a Comment