பயணம் தொடர்கிறது. பரிவுடை உள்ளம் ஓய்வு கொள்ள பயணமே இடைத் தங்கல்.
கால வெளியில் கனிவுடன் கடமை. சுமை என்பது ஏதுமில்லை. சுகமே யாவும்.இன்றே எதார்த்தம். நாளை என்பது இன்றைய தொடர்ச்சி யே.
ஒரே சூழலில், முடக்கம் , இயக்கம் அன்று .
கரையும் கால வெளியில் சகிப்புடன் கலந்து, அன்பெனும் போரில் உள்ளங்களை வென்று அமைதியை நிலை நிறுத்துவோம்.
வெள்ளை க் கொடி வேதனை தீர்க்கும் கொடி, வெறுப்பின் வேர் அறுக்கும் வெடி.
உலகம் முழுவதும் அமைதிக்கு அல்லாடும் கொடுமை, சொல்லி மாளா து.
வெள்ளைக் கொடி ஏந் தும் காலம் இது. உலகெங்கும் சகிப்பின்மை, வெறுப்பு, வன்முறை, பரவலாகி மனித உயிர்கள் கொத்து, கொத்தாய் சாய்கின்றன.
அமைதி வேண்டும் காலம் இது. அன்பு, அறம் தழைக்க, அனைவரும் ஒருங்கிணைந்து வெள்ளைக் கொடி உயர்த்தி உலகை காக்க வேண்டும்.
No comments:
Post a Comment