இடிந்த கரை மக்கள்அங்கே!
இமைகள் சுரந்து
இதயம் கனத்து,
பெய்யும் மழை
ஆதரவாக,
பேரிரைச்சலுடன் குளமாக்கி,
மக்கள்!
போராட்ட சூடு வாங்கி,
சூறைக் காற்றும் பலமாக,
நாள்கள் கடந்து
மாதங்களாக,
உயிர்வாழும்
உரிமை வேண்டி,
உயர்த்திடும் குரல்கள்,
சாதி மறந்து,
சமயம் துறந்து
சாயாமல் ,
சங்கொலி எழுப்பி
சந்தேகம் கிளப்பி,
சாக்காடு போக்க
கூப்பாடு போடும்,
கூடங்குளம்
கூன் முதுகு அதிகாரத்தை
நிமிர்த்திட!
(2011 களில் எழுதியது)
No comments:
Post a Comment