Thursday, December 6, 2018

முறுக்கும்






திசை திருப்பும் அரசியல்
தசை முறுக்கும்
பசை சேர்க்கும்
பதவி சுகத்தில்.

பக்தி கூட்டும்
பல வண்ணம் ஏற்றும்
பகை மூட்டும்
படம் காட்டும்.

பாசங்கு தேசத்தில்
திரிசங்கு ஊதி
தெரு சங்கம் நிறுத்தும்,
வரி சங்கம்.

வாணலியில் தாளிதம்
நாள்தோறும்,
வன்மம் ஏற்றும்.

விவசாயி போராட்டம்














கோவணம் கேவலம்!
அம்மணம் அவமானம்!

நிறைவேற்ற வாக்குறுதிகள்..............?
நிலையற்ற காப்பு/உறுதிகள்..............?

'பைன் காடு'



கவிஞர்.கப்ரியிலா மிஸ்ட்ரல்

காட்டிற்குச் செல்வோம்
இக்கணம் நாம்,
விரைந்திடும் மரங்களின்
காட்சி உம் முன்,
தங்கி  அவற்றிடம் உம்மை அளிப்பேன்
ஆனால்,
அவை குனிந்து வர
இயலா.

ஊருயிரிகளை கண்காணித்திடும்
இரவு,
பைன் மரங்கள் தவிர்த்து  பொறுப்பேற்கா:
பழைய புண்ணுற்ற வசந்தங்கள்,
போற்றிடும் பிசின்
ஊற்றேடுக்கும்,
இறவா பிற்பொழுதுகளில்.

இயலுமெனின்,
அம் மரங்கள் உம்மைச்
சுமந்திடும்,
பள்ளத் தாக்கிலிருந்து
பள்ளத் தாக்கிற்கு,
ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு,
நீ,
தந்தையிடமிருந்து, தந்தையிடம்
தாவிச்சென்றிடும்,
குழந்தையைப் போன்று.

மொழியாக்கம்

Monday, December 3, 2018

டிசம்பர் இரவு



விஞர்.வில்லியம் ஸ்டான்லி மெர்வின்

இருளில் நின்றிடும் பனிச் சரிவு
ஆயினும்,
மரங்களின் தென் பகுதி வறண்டு தொட்ட பொழுதில்.

உறுதி கிளைகள் ஊர்ந்திடும் நிலவைத் தேடி
தோகை சுமந்து,
வந்தேன் இக்காட்சியைத் தேடி,
முதிர் வெண் செடிகள் காண,
மிக முதிர்வுற்றது முதலில் பாழாகி உலர்ந்தது.

நிலாவில் விழித்திருக்கும் காக்கையின் ஒலி,
நான் கேட்கிறேன்
நீர், அதன் விரல்களில்/ன் ஊடாக,
முடிவற்று ஓடிக் கொண்டிருக்கும்.

இன்றிரவு, மீண்டுமொருமுறை
 நான் கண்டேன் ஒரு ஒற்றை வழிபாடு,
 அது எனக்கானது அன்று.

(மொழியாக்கம்)

Saturday, December 1, 2018

'அந்தமான் காய்'

'அந்தமான் காய்' தருவேன்
அதை நடுவேன்
சொந்த மண் அழிவிற்குப் பின்
ஆறுதல்
அடுத்த மாநில' மான்'
கடுக்காயோ!
துடுக்காய் கேட்டேன்!

தென்னைக்கும்
இடதுசாரி ஆகாதோ?
தமிழ்நாட்டில், 'டெல்டாவில்'.

15 கழிந்தது பார்வையிட ,
16ல் பல்லுறுதிகள்.
பகடை உருட்டும் சகடை அதிகாரம் ,
வாடிக்கையாக.
சமதளம் இழந்து,
சம்பிரதாயப் பவனியில்.
' சாதனை சுமந்து' ,
வேதனை சேர்க்கும்.

இழந்தவர் சூழலில், தம்மை வைத்து
தவிப்புணரார்!

சிந்தனைச் சூழ் ஒளி வட்டம்


கவிஞர்.கெவன் ஆர்வுட்

உலகின் ஒழுங்கைக் காட்டு,
அனைத்து பட்டறிவுக்கும் முன்னர்
இது இப்படி, கடு-விளிம்பின்
வெளிச்சம் என்று,
உலகிற்கும், சிந்தனைக்கும் பொதுவான,
மாதிரி இல்லை,
உண்மையைத் தவிர.

மொழி சரியான விளையாட்டன்று,
அவ்வாறாயின்,
எவ்வாறு நாம்
விளையாடியிருக்க இயலும்?
பொருட்களின் கூட்டல்ல  உலகம்
அதை விட மேலானது.
நிலா , வான் போன்று, நடுவம் போன்று
உடல், படுக்கை போன்று,
பாடிடும் மேதாவிகள் அறிவர்.

காதலர் இருவர் படங்கள்
அருகருகே, துயின்று
கனவு கண்டு, விழித்து
மெய்யுலகை, கனவுலகைத்
தாங்கி நிற்பர்
உடல், உடலாக;
சொல், சொல்லாக
சிந்தனை வன,
ஒளி வட்டத்தில்


(மொழியாக்கம்)

வாழ்க்கையின் பாதி


(கவிஞர்.பிரடரிக் ஓல்டர்லின், செர்மானியக் கவிஞர்.
வசந்த கால செழிப்பும், குளிர்காலச் சிரமும் குறித்து, இப்படி .......)

மஞ்சள் பேரிக்கள்
காட்டு முளரிகள் பூத்துக் குலுங்கும்
எங்கெங்கும்
ஏரியை நோக்கி நீண்டிடும் கரை
ஓ! கருணை மிகு அன்னப் பறவைகளே,
முத்தங்களை மொண்டு
தலைக் கவிழ்ந்து
தெளிந்த தூய நீரில்.

ஆ, எங்கு காண்பேன்
மலர்களே,
குளிர்கால வருகையில்
சூரியக் கதிர்கள் எங்கே?
பூமி நிழல்கள் எங்கே?
சுவர்கள் குளிர்ந்திருக்க
பேச்சற்று காற்றில்
வானிலை திசைக் காட்டி
கிரீச்சொலியில்

(மொழியாக்கம்)

சாய்க்கடை சாதனை



உடைந்த சிமெண்ட் கட்டை,
 ஒடுங்கிய மட்டை
ஓட்டம் இல்லா,
ஒப்புக் கட்டை
சப்புக் கொட்டி செல்வார் சாரிகள்,
பாதையில்.

மூக்கைப் பிடித்து, மூச்சுத் திணறி
வெளியே கொட்டுவார் ,
வெறுங்கைகளால்!
ஒப்பந்தம் இதற்கும்,
மழைக் காலம் சில்லறை சேர்க்கும்.

சேறும், சகதியும் சேர்ந்து
 உள்வாங்கும் உலகமாய்!

நொதிந்து நோய்க் கிருமி பெருக்கி
ஆய்வகமாய்!
மூடியதால் முடுக்க வினை
 நொதிப்பில்.

உயர் அதிகார செழிப்பில்,
ஒப்பந்தகர் உயர்வில்!
ஒருங்கிணையும் பொது நலம்.

இவர், அவர், பேதமின்றி
சாலைகள்
சமரச சோலைகள்!
துப்புரவு ஆலைகள்!

Thursday, November 29, 2018

பனியும் நெருப்பும்



கவிஞர்.ராபர்ட் ப்ரோஸ்ட்

சிலர் கூறுகிறார்
இவ்வுலகம்  நெருப்பில் அழியும் என்று,
சிலர் கூறுகிறார்
பனியில் என்று.

என் விருப்ப அனுபவிப்பில்
நெருப்பு என்பவர்களுக்குஆதரவாய்
நிற்கிறேன்.

ஆயினும், இருமுறை அழியுமாயின்,
நான் எண்ணுகிறேன்
வெறுப்பின் போதிய புரிதல்
எனக்குண்டு,

அழிவிற்கு பனியும்
மிகப்பெரிய ஆற்றலே,
போதுமானதாகும்.

(மொழியாக்கம்)

Wednesday, November 28, 2018

ஊஞ்சலாட்டம்





கவிஞர்.கோ சுவான் குவாங்

யார் எழுப்பியிருப்பினும்
கம்புகள் நட்டவரை போற்றுவோம்
சிலர் ஊஞ்சல் ஆடவும்,
பிறர் அதைக் காணவும்.

சிறுவன் ஒருவன் மேலெழும் விசையில்,
முதுகை வில்லாக வலைத்து.
வடிவமுடை பெண்
தன் இடுப்பை உந்தி,
மேலெழுப்பி.

இளஞ்சிவப்பு  முழுக்கால் சட்டைகள்
நான்கும் காற்றில்
படபடக்க,
இரு இணை கால்கள் நீட்டி
பக்கவாட்டில்/அருகருகில்.

வசந்த விளையாட்டுகள்,
யார் அறியார்?
ஊஞ்சல் கால்கள் அகற்றம்,
குழிகள் காலியாக.

(மொழியாக்கம்)

Sunday, November 25, 2018

புதிதல்ல





கணக்கெடுப்பார்
கணம் முடிப்பார்
கணக்கே அறிவியல் என்றறியார்.

அப்படி ஒன்று, இப்படி ஒன்று
எப்படியோ,
கதை முடிப்பார்.

இன்றல்ல, நேற்றல்ல
இதுவரை ,
இதுதான் வரையறை
என்றறைவார்.

தரவுகள் வரவுக்காக,
புள்ளிக்கும் விவரத்திற்கும்.

புதிதல்ல,
நிவாரணம்!

நினைவில் நிற்கும் புன்னகை



கவிஞர்.சார்லஸ் புகோவஸ்கி

எங்கள் வசம் தங்க மீன் இருந்தது,
சுற்றி, சுற்றி வந்தது.
மேசை மீது ,
மீன் கலயத்தில் பலகணி அருகில்,
திடமான திரைச் சீலை,
தாயின் படம் மறைத்து,
எப்போதும் புன்னகை பூத்து,
அனைவரையும் மகிழ்ச்சியாக
இருங்கள் என்று கூறினார்,
'என்ரி மகிழ்ச்சியாக இரு!'
 என்றார்.

அவள் சரியே: உம்மால் இயன்றால்
மகிழ்ச்சியாக இருப்பது
மிக நன்று,
எனது தந்தை தொடர்ந்து
அவளை துன்புறுத்தி வந்தார்
என்னையும் சேர்த்து,
வாரத்தில் பலமுறை.

6.2 அடியில் நெடிய தோற்றம்
உள்ளார்ந்த சினத்துடன்,
அவருள்
என்ன தாக்கிக் கொண்டிருந்ததோ.

என் தாய், பரிதாபத்திற்குரிய மீன்,
மகிழ்ச்சியாக வாழ்ந்திட விழைந்து,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள்
அடிபட்டு,
என்னிடம் 'மகிழ்ச்சியாய் இரு என்ரி!
ஏன் புன்னகைக்கவில்லை?' என்பார்.

பின்  புன் முறுவல் இடுவார்,
எப்படி என்று,
நான் அதுவரை
கண்டிராத மிகவும் துக்கமான புன்னகை
அதுவாக,

ஒரு நாள் தங்கமீன் இறந்தது,
ஐந்து மீன்களும் இறந்து மிதந்தன.
அதன் கண்கள் திறந்தபடியே,
ஒருக்கலித்து மிதந்தன.

 தந்தை இல்லம் வந்தபின்,
அவைகளை வீசி எறிந்தார்
பூனையிடம்,
சமையலறை தரை மீது.

நாங்கள் பார்த்திட,
எங்கள் தாய்
புன்னகைத்தார்.

(மொழியாக்கத்தில்)

ஏற்கவில்லை




உதிரியானேன்  என்றாய்,
ஆயினும் சிதறவில்லை!
ஒட்டாததால் உடைந்தேன்
என்றாய்,
உடைந்தாலும்,
உருவம் குலையவில்லை!
உருப்படியில்
தேய்வில்லை!

உள்ளது மாறினும்,
உண்மையில் மாற்றமில்லை!
உயர்வில் குறைவில்லை!
ஓட்டம் நிற்கவில்லை!

தேங்கிய அணி,
ஓங்கிய வளர்ச்சியில்லை!
ஒத்தடம் போதவில்லை!
ஒளடதம் ஏற்கவில்லை!

Friday, November 23, 2018

நெகிழ் பிணை



கவிஞர்.நவோமி சிகாப் நை

என் உடன் பிறப்பு தனது சிறிய வெண் படுக்கையில்,
உறவு இழையின் ஒரு முனையில்.
இன்னும் விழித்திருந்தேன் சமிக்ஞையில் நான்,
பிணைந்திட மறு முனையில்.
நாங்கள் பேசியிருக்கலாம்,
ஒருவருக்கொருவர் பாடியிருக்கலாம்,
ஒரே அறையில் ஐந்தாண்டுகள் நாங்கள்,
நாள் முழுவதும் நாங்கள் சண்டைபிடித்து இருந்தாலும்,
தேய்ந்த சிறு முனையுடை மெல்லிணை
ஆறுதல் அளித்து, எம்மை இணைத்தது இருளில்.

முதலில், ஆழ்ந்து உறங்கியபோதில்
இழை முனை தரையில் வீழ்ந்து துக்ககரமாக,
அவனைக் காணவில்லை,
எனினும்
அவனின் சீரான மூச்சை கேட்க இயலும்,
முன் நின்றது
பிரிந்து தொடர்
எம் வாழ்க்கைப் பயணம்.

(மொழியாக்கத்தில்)



Thursday, November 22, 2018

இந்த முறை பேருமா?








எண்ணெய் கசிவிற்கே
கசியவில்லை!
'வர்தா'(சிவப்பு) வுக்கே
வாய்க்கவில்லை!
'தானே'வுக்கு
 தயவில்லை!
'ஒகி'க்கு
ஓட்டமில்லை!
 சென்னை வெள்ளம்
செல்லுபடியாகவில்லை!

'காஜா'வுக்கு.........?

Wednesday, November 21, 2018

மரண தேவன்


கவிஞர். நசீர் அக்பராபடி

பேராசை , தூண்டுதல் விட்டொழி,
உமது அண்மை, தொலைவு சுற்றுச் செலவு
மறந்துவிடு;
மரண கொள்ளையன் தமது எக்காள இசை நிகழ்த்துகிறான்
பகல் இரவை கொள்ளையிட்டு;
இடம் விட்டு இடம்,  உமது பரிவாரங்களுடன் ஏன் சுற்றித்திரிகிறாய்;
சுள்ளியும் கூட இறுதியாக உம்முடன் சேரா மரணம் நேர்கையில்;
உமது வளங்கள், பெருமைமிகு வாழ்க்கை  யாவும்
உமக்கு பின்னால் நின்று போகும்;

உமது போர்வாள், கேடயங்கள் கண்டு தற்பெருமை அடையாதே;
மரணத்தின் ஈட்டியை கண்ணுற்று
அவை உம்மை விட்டு அகன்று விடும்;
தனியாக, பாலைவனத்தில் புதைகுழியின் தூசு
உமக்கு உணவாகும்;
அந்த பாலையில், மெய்யாக, நசீர்,
ஓர் ஊருயிரியும் உம்மிடம் வருகை தராது;
உமது செல்வங்களும், செழிப்பான  வாழ்க்கை முறையும்
அகன்று போகும்;
 மரண தேவதை தனது முதுகில் உம்மைச் சுமக்கும்
 தருணம்.

(மொழியாக்கத்தில்)



கஜா புயல்










எட்டிய தூரம் கொட்டிய மழை,
சுற்றிய வளி, சூறாவளி
 சுருண்டது வேதாரண்யம்
 சுழல் விசையில்.

முற்றிய துயரம், வற்றிய கண்ணீர்!

தலை சாய்ந்த தென்னை,
குலை சாய்ந்த வாழை,
சரிந்த கருப்பம் கொல்லை,
பிஞ்சு பிளாகாய்,
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து ,

மாவடை, மரவடை யாவும் மல்லாந்து,
மடிந்தது வாழ்வாதாரம்,
சேர்ந்தது
உயிர்ச்சேதம் .

கால்நடைகள் கதறின,
கடுஞ்சீற்றத்தில் சிதறின
ஆயுள் முடிந்து.

குடிக்க நீரில்லை!
கொடுப்பார் யாரும் இல்லை!
உண்ண உணவில்லை!
உருப்படியும் தேறவில்லை!

ஓலைக் குடியும் இருந்த இடம்
தெரியவில்லை!
மின் கம்பங்கள் வில் கம்பாய்
வீழ்ச்சியில்!

நிமிர்ந்து நிற்க இயலவில்லை!
காவிரிப் படுகை மக்கள்
அல்லலுக்கு, அளவில்லை!

 வேனிற்காலத்தில்
 வெளிச்சம் இல்லை!
கொடி பிடித்தும், குரல் உயர்த்தியும்
கொடுப்பினை இல்லை!

வாழ்வாதார நீர்,
 வாய்தாவும் தீர்வில்லை!
கை கொடுக்கும் தை,
கனவும் வசமில்லை!

இருண்ட காலம் எதிரில்,
இம்மியும் இளிப்பில்லை!

நகரத்தின் துயரில் நாட்டம் கொள்வார்!
கிராமங்கள் என்றதும்
விலகிச் செல்வார்!


உழுவார் உடைந்தார்!
 உலகத்தார் மறப்பில்!

கதறுகிறார்!
கண்ணீரும் கம்பலையுமாக,
பதறுகிறார்!
பட்டினி, பசியில்.

குழந்தைக் குட்டிகள்
குளிரில், கொசுக்கடியில்,
மருத்துவமும்
எட்டிப்போக.

மறைக்க மாற்றாடை இன்றி,
மண் மாணிக்கமாய்
உறக்கம் தொலைத்து,
உறவை இழந்து.

எப்போதும் போல்,
நிவாரணம்
அடையாளமாய்!

நிரந்தர தீர்வு,
நித்திய தரித்திரராய்!

பல புயல்கள் கொடுத்த அடி,
தீரா வடுவாய்!
இடிமேல் இடி வாழ்க்கை ,
இயல்பாய்!

விதியை நம்பும் வேதனையாய்!
அடிப்படை அகன்று
அந்நியமாய்!

விளிம்பு நிலை விசாலமாகி,
மீளாக் கடனில்,
மிரட்டும் அதிகாரம்!
யதார்த்தமாய்!

நொடிந்து, நொந்து
கூலி உழைப்பாய்
பெயர்ந்திடுவான்,
விவசாயி-மீனவ உழைப்பாளி!










Monday, November 19, 2018

சூறாவளி


கவிஞர்.அப்டாப் அலம்

வேய்கூரை வீடுகள், பெருமழையில்
வாய்ப்பிளந்து,
கொடுஞ் சூறாவளி
அழிவு-அழிவு எங்கெங்கு காணினும்,
ஆக்கம்  இல்லை.
வேரோடு சாய்ந்த மரங்கள்,
கவிழ்ந்த துயரத்துடன்.
கதறினர் அனைவரும்
நம்பிக்கை இழந்து
இயற்கையுடன் எவர் போரிடுவார்?
எவர்,
நமது கனவை வீழ்த்துவார்?


தொலைவில் ஒலி,
கேட்கிறது.
நாமே, நாம் மட்டுமே,
வேறேதும் இல்லை.

(மொழியாக்கத்தில்)

ஒரு பெண்






எஸ்ரா பவுண்ட்.

எம் கைகளில்  நுழைந்தது
மேற் கரங்களில் படர்ந்த  கன்று
மார்பில் கீழ்நோக்கி வளர்ந்தது
என்னுள் இருந்து கிளைத்தது

நீயே மரம்,
நீயே பாசி,
அசைந்தாடும் காற்றின் ஊதாவும் நீயே
உயரிய குழந்தையும் நீயே,
இவை யாவும்   மதியீனம் உலகிற்கு.

(மொழியாக்க முயற்சி)

அவன் படகு

 கவிஞர்.கெலஸ் வெலெரியஸ் கெட்டுல்லஸ்

நீங்கள் காணும் இப் படகு, நண்பர்களே!
 மிக விரைவான கலம் என்று கூறிடும்,
பாய்மரமோ அன்றி துடுப்பு உழைப்பில் செலுத்தப்படுவதோ,
வேகத்தில் எதுவும்  அறைகூவல் விடுக்க இயலாது,

அச்சுறுத்தம் அட்ரியாட்டிக் கடற்கரை,
சைக்கிளடாசு தீவுகளோ, பெருமை மிகு ரோட்ஸ்,
அன்றி அச்சம் தரும்
போசுபரஸ் தீவுகளோ, கருங்கடற்கரையின் சோகமான விரிகுடாவோ,
அதனை மறுக்க இயலா,

படகாவதற்கு முன், இலைகள் அடர்ந்த காட்டு மரமாக:
சைடோரஸ் சிகரங்களில், அடிக்கடி இலைகளின் இரகசியங்களுக்கு
ஓசை கூட்டி,
இவைகள் உமக்கு நன்கு புரியும்,
அமஸ்டிரிஸ், மற்றும் அடர் மரங்கள் போர்த்திய சைடோரஸ்
அறிந்திடும்:

ஆரம்பத்திலிருந்து உமது மலைச் சரிவில் நின்று,
அதன் தழும்புகள் உமது நீரில் தோய்ந்து,
உரிமையாளரைக் கடந்து, பல தலைகனம் உடைய தடைகளையும் தாண்டி,

வீசும் காற்று படகின் வலப்புறம் அன்றி இடப்புறம் கூவியதோ,
அல்லது பெருஞ்சுழற்காற்று  அடுக்கிடையீட்டுத் தகடுகளை,
 பதம் பார்த்ததோ
 ஒரு பக்கத்தில், மறு பக்கத்தில், முழுவதுமாக:

கடற்கரை வதியும் தெய்வங்களுக்கு படையல்
 செய்திடவில்லை,,
அயல் தேசக் கடலிலிருந்து,
தெளிவான ஏரிக்கு வருகை தந்தபோது.

இவையாவும் கடந்த காலம்:இங்கு
மறைவிற்குள்,
அமைதியாக வயதாகிக் கொண்டிருக்கும்,
தன்னையே, காஸ்டர் மற்றும் சகோதரருக்கு- சுவர்க்க இரட்டையருக்கு- அளிக்கிறது.

(எமது மொழியாக்கத்தில்)

Friday, November 16, 2018

ஏரிடஸ்








கவிஞர்.எஸ்ரா பவுண்ட்

நாணம் கொண்ட ஏரிடஸ்
அழகற்ற ஒருத்தியை மணந்தான்,
வாழ்க்கை குறித்து எரிச்சல்,
ஊக்கம் கெட்டு, ஆர்வமிழந்து
தன் நெஞ்சுக்குள், 'எனக்கு நான் பயனில்லை,
'அவளுக்கு தேவையாயின், எடுத்துக் கொள்ளட்டும்'.
பேரழிவுக்குள் தன்னை  அணைத்துக் கொண்டான்.

(மொழியாக்கத்தில்)

Thursday, November 15, 2018

ஒரு ஒப்பந்தம்







 கவிஞர். எஸ்ரா பவுண்ட்

உம்முடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன், வால்ட் விட்மன்_
நீண்ட காலம் உம்மை வெறுத்துள்ளேன்.
பிடிவாத தந்தையின்,
வளர்ந்த குழந்தையாக நான் உம்மிடம் வருகிறேன்

நட்பு நாடும் அகவை இப்பொழுது.
புதிய தடம் உடைத்தவன் நீ,
செதுக்கும் காலம் இது.
நம் வசம் இளங்கன்று ஒரு வேர்.
இடையே கொடுக்கல் வாங்கல் நடக்கட்டும்.

(எமது மொழியாக்கத்தில்)

Wednesday, November 14, 2018

நாட்களில் முழுமை இல்லை











இரவுகளில் முழுமை இல்லை
வாழ்க்கை நழுவுகிறது ஒரு வயல் எலியாக
புல்லை அசைக்காது

எஸ்ரா பவுண்ட்

(எமது மொழியாக்கத்தில்)

டோரா டில்லர்










கவிஞர்.ஜேக் பிரிலட்ஸ்கி

'என் வயிற்றில் நிறைய பட்டாம் பூச்சிகள்!'
புலம்பினாள் டோரா டில்லர்,
அவள் தாய் பெருமூச்சிட்டாள். ' அதில் வியப்பேதுமில்லை
நீ கம்பளிப்பூச்சு உண்டாய்!'

(எமது மொழியாக்கத்தில்)

Tuesday, November 13, 2018

சுவர்க்கத்தின் இருள்

 கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர்

தனித்து, வெறிச்சோடிய தெருக்களில்,
நான் நடந்தேன்.
குளம் போல் தேங்கிய,
இரத்தத்தின் ஊடாக,
விரிந்த  வளமான, விளைச்சல் மிக்க நிலத்தில்.
கிளர்ச்சியாளர் பெற்ற சமாதானம்
இதுவா ?


எமது தாய், தமக்கைகள்
 நம்பிக்கை இழந்து
அவர்கள் விருப்பத்திற்கு எதிராக,
அறியாமையை சீர்குலைத்து, அத்துமீறி,
கற்பழிப்பவராக, கொள்ளையராக,
குருதி வெறி, குற்ற மூர்க்கராக
அமைதியான நிலத்தில் தடம் பதித்தனர்.

காற்று இனிமை இழந்து
வலியுடன், வலிமை இழந்து.
சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக,
முட்கள் அடர்ந்திட,
 மந்தமான எதிர்காலத்துடன்.


இது ஒரு அச்சமான தருணம் அன்றி
 வேறல்ல.
வல்லூறுகள் கொண்டாடும் தினமாக.
 மெச்சத்தக்க நினைவு உடல்கள்,
 குப்பை கூளமாக,
எமது இதயங்கள், ஆன்மா இரத்தம் சொரிய.

ஓ! சிதலமடைந்த,
பிளவுபட்ட, தாய் நாடே! 
உமது ஆறுதலுக்காக, 
அமைதியை தக்க வைத்திடு.
உமது பெண்கள், பிள்ளைகளின்
விருப்ப ஆசை து:
உம்மிடம் வேண்டுகிறோம்,
இனிமையான தாயே,
எம்மீது இரக்கம் காட்டு!

(எமது மொழியாக்க முயற்சியில்)

Monday, November 12, 2018

வேனிற்காலம்





காத்திருக்கிறோம் நாங்கள்.
நீங்கள் இங்கே,
எம்மை உயிர்ப்புடன் வைத்திட,
கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து.
பறவைகள் மீண்டன.
நடவடிக்கைகள் உயிர்ப்புடன்.
அவரவர் ஆர்வக் கிளர்ச்சியில் விளையாட்டு.
ஆம்! கோடை மீண்டும் வருகை.
ஆயினும், எமது சிந்தனைகள் அலைகளாக.
மழை ஏன்?
எமது வகுப்பறை தவிர்த்திட.
நடவடிக்கைகள் விலக்கி.

உம்மை புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை.
நீ கோடைக் காலமா?
கோடை மழை என்று விளிக்கலாமா?
தயை செய்! தயை செய்!  விடை சொல் .

*சொந்த நாடான சியோரா லியோனிலிருந்து, போட்ஸ்வானாவிற்கு புலம் பெயர்ந்து, கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர், வேனிற்கால அனுபவத்தை, தனது நாட்டு பருவ நிலையோடு, ஒப்பிட்டு எழுதியது.

(எமது மொழியாக்க முயற்சியில்)

Sunday, November 11, 2018

நாட்டுப்பற்று




நாட்டை விரும்பு, விசுவாசமுடன் இரு;
சக நாட்டினர் மெச்ச, விருப்பத்தை வெல்,
ஆக்க விமர்சனத்தை மதிக்க கற்க.
தவறாக வழிநடத்தக் கூடும் வசீகரிப்புகள் தடுத்திடு.
உமக்குரியதை ஏற்றுக்கொள்,
பிறரிடம் காண் நற்பண்புகளை.
உமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்து,
நல் மாற்றம் கொண்டு வா.
பலவிதங்களில் உம்மால் இயலும்.
விசுவாசமிக்க போர்வீரனாக,
சுயநலமற்ற அரசியல்வாதியாக
சமூக தரத்தின் மேம்பாட்டில்.
புவியில் நீ உதித்ததின் நோக்கம் அறிந்து,
நாட்டுப் பற்றே ஒரே வழி
உம் நற்பணிகளால் நின்றிலங்கிடும் என்றென்றும்.
நாட்டுப்பற்று!  நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று!

கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர்

*எமது மொழியாக்கத்தில்.

மே 25


ஒளிரும் அழகிய நாள் அது,
அதன் குளிர்ச்சியும் மென் தென்றலும்.
தெருவெங்கும் வண்ணகோலங்கள் மின்னும்.
ஞாயிறு காலை என்றொருவர் கூறிவிடலாம்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக,
இறை வழிபாடு உற்சாகம் அளித்திடும்.
விரைவில்,விரைவில், அனைத்தும் அமைதியாக.
துப்பாக்கிகள் ஓசை காற்றில் கலந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும்  அடைக்கலம் சென்றது.
வண்ணங்கள் புலப்படா தடுமாற்றம்.
சண்டையிடும் பையன்கள் அணிவகுப்பில்.
இருப்பினும் இது, முதல் இராணுவப் புரட்சி.

வாழ்க்கையே சலனமற்று அமைதியாக.
வீரர்களின் குரல் செவிகளை துலைத்தது,
அதிகாரிகள் குன்றுகளை நோக்கி ஓட்டம்,
ஆட்சிக் குலைவுக்கு இட்டுச் செல்ல.

நாம் யாவரும் தடகள வீரர்கள்,
வாழ்க்கையைக் காத்திட ஓட்டம்,
இரக்கமற்ற கொள்ளையர் பிடிகளில்,
கெட்ட நினைவாக அது.

செவிகளில் ரீங்காரம் எழுப்பிக் கொண்டிருக்கிறது,
கடப்பது சிரமம் ஆயினும்.
அதன் கொடூரம் வலி,
வேண்டாம் இவை யாவும் யாம் வேண்டுகிறோம்.

*சியேரா லியோன் நாட்டில், சனநாயக ஆட்சி 1996ல் மீட்டெடுக்கப்பட பிறகு, நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒட்டி, நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றி, கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர், எதிரொலிப்புகள்.

*எமது மொழியாக்கத்தில்.

Saturday, November 10, 2018

ஒரு கன்னியின் அறிவுரை


எச்சரிக்கை, ஓ ஏந்திழையே
தேசத்தின் பெருமை நீ
குதறும் ஓநாய்கள் குதூகல உணர்ச்சியில்
உம்மை மலிவாக எண்ணும்
அவர் பசப்பு வார்த்தைகளை செவி மடுக்காதே
பொய்யுறுதிகளை ஏற்காதே
வழுக்கு விலாங்கு அவை
நல்லுணர்வில் தேர்வு செய்
உள்ள வெளிப்பாட்டில் அவரை ஆய்ந்து கொள்
உள்ளடக்கத்தை முகத்தில் வாசிக்க இயலாது
ஒளிந்திருக்கும் ஏமாற்று, எச்சரிக்கையாய் ஓ,
இம் மண்ணின் மகளே
பணி அனைத்தையும் பரிசீலனை செய்திடு
வார்த்தைகளை அல்ல
வீழும் உடல் ஒவ்வொன்றையும் தேடிடு
நீண்ட கூரிய பற்களின் பதிவுகளைத் தேடி
அவை கண்டபின் உண்மையாயிரு
மிதக்கும் காற்று கனவுகளை நீக்கிடு
காற்றாடியாய் பறந்திடு, உண்மையில்
அன்பு காலப் போக்கில் வளர்ந்திடும்.

(கவிஞர்.மாடா ஜோ ஜாய் ஸ்கொயர். 8, மார்ச், 2003ல் உலக மகளிர் நாளையொட்டி, சியாரா லியோன் பல்கலைக் கழக மாணவிகளுக்காக அளிக்கப்பட்ட கவிதை.மொழி பெயர்ப்பில்.)

கனவுகள்



நான்காண்டுகளுக்கு பதிலாக ஆறாண்டுகள் கழிந்தன
பேரச்ச அனுபவங்களில்
பேரச்சம் தவிர்த்து ஏதும் இல்லை எம் நிலத்தில்
நான் வாழ்ந்தேன்
குடும்பத்தை விட்டு நீங்கி
தியாகங்கள் சேர்த்தேன்
இன்றைய வெளிச்ச, ஒளிர் நாட்கள்
வசப்பட: கனவுகள்
மீப்பெருமை முந்தியிருக்க காண்கிறேன்
நெடிய பாதையாயினும்
அங்கு சேர்வேன் என்பதறிவேன், மனிதர் பேராழியைக்
கடந்துள்ளார்
சிலர் கலத்தில்
வேறு சிலர் உள்ளத்தில்
வெகு சிலரே முட்படுகைப் பாதையில் நீந்திக் கடந்தார்;
நான் அறிவேன்
புன் சிரிப்புடன் இறுதியில்
பேராழி பெரும் பரப்பாயினும்
எம்மால் கடந்திட இயலும் என்றறிவேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)