விழுமியங்களைத் தேடும் விழுது
விலகிய வெளிச்சம் இருண் மை கவியும்
இன்னதென்று விளங்கா இன்னல் சேரும்
சன்னல் கதவு மூடினாலும் இண்டு இடுக்கின் வழி
சடக்கென பாயும் சந்தடி சேர்க்கும்
சொல்லில் நிற்பார் தொகை குறையும்
மணல் வீடு கதை சேர்க்கும்
ஓடோடி வந்தார் உதவி செய்தார்
பதவி காத்தார் பக்குவமாய் பல
பொருள் சேர்த்தார் உதவி ஏற்றார்
உதறி ஓய்ந்தார் திருப்பம் காணா
வாங்கியபோது வளைந்தார்
நெளிந்தார் சாங்கியம் போல்
வீங்கினார் விடைபெற்றார்
செய்நன்றி மறந்து செப்பமாய்
அப்பமாய் உயர்ந்தார்
உப்பிச உணர்வில் கரைந்தார்