Monday, June 8, 2026

முதுமை

 

முதுமை பயணத்தில் பொழுது, காலம்அதன் ஒழுங்கில், அதன் விசையில், தளர்வின்றி, தொய்வின்றி நகர்கிறது. அதன் உலகில் ஒன்றிய ஒரு சமயம் , ஓய்வில், இப்படியாக எண்ணம், எழுத்தில் நிலை கொண்டது.

"எப்படியோ கழிகிறது காலம்.

இப்படித்தான் என்றில்லாமல். திட்டமிடாத திட்டமாக, தெவிட்டாத கட்டமாக. ....

பட்டமாய் இருந்தால் பறந்திருப்பேன்.வானில் திரிந்திருப்பேன் .  நூல் பிடித்தவன் திறமையில் வாலு டன், வண்ணத்தில் மிதந்து மின்னியிருப்பேன்.என்னை மறந்திருப்பேன்.

எண்ண ஓட்டத்தில், நீல வானத்தில், காற்றின் கலகலப் பில் கரைந்திருப்பேன். உன்னத உயரத்தில் ஏறி இருப்பேன்.அசைந்து, அசைந்து ஆட்டம் போட்டு, ஆனந்த இராகம் இசைத்து, அலுப்பு நீங்கி, சலிப்பு போக்கி.....

No comments: