நகரத்தின் ஓரம்.நெடுஞ்சாலையை ஏகடியம் செய்யும் வாகனங்கள்.எவ் விதியும் ஏற்க மாட்டோம் என்ற கதியில் விரைந்திடும், இரைந்திடும், நாள் தோறும், ஓய்வு, ஒ ழிச்சல் இன்றி
பொருந்திய இல்லம் கழன்று பெயர்ச்சியில் , அயர்ச்சி நீக்கி, ஆழ்ந்த இல்லில் பொழுதுகள் கரையும்.
வடக்கில், தானாக முளைத்து , கிளைத்து நிழற் பரப்பிடும் மரங்கள். தேன் சிட்டு, சிர்ப், சிர்ப் என்ற அசை, மரங் கொத்தியின் டக் டக்...தாளவரிசை, கோகிலத்தின், ஓயாமல், சாயாமல் தொண்டை வற்றி, வரண்டு போகுமோ? என்று எண்ண தோன்றும் குரல் சூழல். திடீரென தென்படும் மயிலும்,பிற உயிரினங்களின் வதிவிடமாகவும் நிலவும், நீளும்........
தார்ச்சாலை உமிழும் வெப்பம், வாகனங்கள் வெளியிடும் மாசு, செவிப்பறைக்கு கேடு கூட்டும் ஒலி மாசு, தூசு , தும்புகளை வடி கட்டி, சுத்திகரிப்பு சுருதியில், நொடிப்பொழுதும் சலிப்பின்றி வாழும் செடி, கொடிகள், மரங்கள் இயல்பாய் தம் வினையில் ...
இது எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும், 'பொலிவுறு பேரிடரில்', ' சுற்றுலா கிறக்கத்தில் '. மர மட்டைகள், செடி, செட்டுகள் வளர்ச்சி யின் எதிரியாய் கான்கிரீட் கட்டமைப்புகள், தார் உருகும் சாலையில், வெப்பம் கூட்டும், வேதனை சேர்க்கும் ' முன்னேற்ற பதாகை' ஏற்றும்.....
No comments:
Post a Comment