(Lovers in old age, கவிதை,
காலின் அயன் செப்ரி ,
மொழியாக்கம்)
முதுமை , உணர்ச்சி ஓட்டம் குறைக்கும்
குருதி சூடாவதில்லை
நினைவும், கனவும் ஏங்கி காத்திருக்கும் பொழுது
அம்மண உடல்கள் ஒன்றாய் இணை பொற்காலம் அவை
அன்பு, முத்தம், தழுவல், உணர்ச்சி, எழுச்சி , விருந்தில் புலப்படும் பொழுது
பருவ நிலை இன்பங்கள் பகிர்ந்து உம்மோடு ,
என் அன்பே!
காலங்கள் விஞ்சவில்லை ,உணர்ச்சி ஆளுமை நாட்களில்
காதல் செய்தோம், சமயம் நேரும் போதெல்லாம், தனிமையில்
ஒன்றிணைய தேவையற்ற இப்பொழுது, குருதி பந்தய விசையில் இல்லை
இரவு வணக்கம் முத்தத்துடன் முடியும், விருப்ப வெளிப்பாட்டுடன்
இரவின் அமைதியில் துயில்வோம்
காலை விழிப்பில் முத்தத்துடன் மீண்டு.
No comments:
Post a Comment