இறப்பு
இரங்கலு க்கு உரியதே!
போர் ஆயினும்
விபத்து ஆயினும்
பொல்லாங்கிற்கு
இடமில்லை !
ஓர் உயிர் உருவாக்கிய
படைப்பின் உழைப்பை
இயற்கையின் ஏற்பாட்டை
உடைக்கும் உரு குலைக்கும்
அதிகாரம் இல்லை
எவருக்கும்!
அவர் இவர்
என்ற பேதம்
இசம்
தேசம்
சமயம்
மதம் இதில்
நேயம் அற்றதே !
பிறர் இறப்பில்
களி கொள்வது
வாய் மெல்வது
விலங்கு ஒப்பா செயல்!
No comments:
Post a Comment