Thursday, June 13, 2024

மறந்து விடக்கூடாது !

 இயற்கை உபாதையை கூட பாதுகாப்பாக கழிக்க முடியாத நிலை புதுச்சேரியில். மீத்தேன் வாயு வீட்டிற்குள் புகுந்து உயிர்பலி. ஆன்மீக பூமி, சுற்றுலா வளர்ச்சி, பல துறைகளில் முன்னேற்றம் என்ற பாராட்டு, பதாகைகள் மேடை ஏறும் நாள்தோறும் 

உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் பொதுப்பணித்துறை கழிவு அகற்றும் பணி முறையாக செயல்படாத நிலையில் , அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள ,மக்களின் வாழ்வுரிமை பறிப்பு ,நிகழ்ந்துள்ளது.  இத்தகைய கொடுமைக்கு ,எவ்வித சமாதானமும் ஏற்பு உடையதல்ல.

இந்த சம்பவம் ஒரு கொலைக் குற்றத்திற்கு உரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் , ,அதிகார அடுக்கின் மேல் நிலையில் இருந்து,  கீழ் நிலை வரை , தண்டனைக்கு உரியவர்கள் ஆகும்.

பாதாள சாக்கடைத் திட்டத்தின் தரம், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புதுச்சேரி அரசு  இத்  தருணம் , உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பல பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரி ப்பு  கிணறுகள், நிலையங்கள் அமைக்காமல், ஒப்பந்ததாரர் நலனுக்காக பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிப்பது, பத்தாண்டுகளுக்கு மேலாக ,அப்படியே அலட்சியமாக விட்டு விடுவது, " பொலிவு நகர திட்டத்தின்" இலட்சணம் அல்ல.

அதிக தாவர உயிர்களும், பிற உயிரினங்களும் வாழும் கடல்,  தாய்க்கு சமமாக,போற்றப்பட வேண்டியது, பாதுகாப்புடன் பேணப் பட வேண்டும். ஆனால், வேதியல்  தொழிற்சாலை கழிவுகள்,சாக்கடைத் திட்டக் கழிவுகள் என நாள்தோறும் கடலில்  பெருமளவில் கலக்கிறது. 

இது யார் குற்றம் ? 

சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அரசு நிர்வாகம் ,அதனை சீர்குலைக்கும் வகையில் பல  பரிமாணங்களில் எதிர்மறையாக செயல்படுவது ,நல்லது அன்று.

ஊர் முழுக்க திறந்த சாக்கடைகள், குப்பைகள் மிதக்கும் வாய்க்கால்கள் ,  கொசு கும்மாளமிடும் கோட்டமாய், விளங்கும் கோலம், புதுச்சேரிக்கு அழகு சேர்க்குமா?

போர்க் கால அடிப்படையில் இவற்றை தீர்க்க களத்தில் இறங்கி , இதய சுத்தியுடன் வேலை செய்ய வேண்டும். அதிகாரம், ஆஸ்தி இவைதான் வாழ்க்கை என்ற  கோணல் அரசியல் ஒரு பேரழிவை படிப்படியாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் என்கின்ற இயற்கை நியதியை நாம் மறந்து விடக்கூடாது.

Monday, June 10, 2024

கரை ந்திடு

 இருக்கும் இடத்தில் கரைந்திடு 

இறுக்கம் நீக்கி தளர்ந்திடு 

நெருக்கம் உணர்ந்து திருந்திடு 

நேரிய வழியில் நடந்திடு

நேர்மை எது என்று அறிந்திடு 

நேற்றைய வாழ்வை மறந்திடு 

இறக்கிய சுமை ஏற்றாதே 

இன்னொரு சுமை  தாளாதே 

Sunday, June 9, 2024

கணக்கு

 எல்லாம் தெரியும் எனக்கு 

எதுவும் தெரியாது உனக்கு

எக்கிடும் தப்பு கணக்கு 

ஏங்கிடும் மனக் கணக்கு 

எல்லாரிடமும் இருக்கு 

ஏ ன்  இந்த கிறுக்கு 

இற ங்கிடு. மீசை முறுக்கு 

Friday, June 7, 2024

"வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு"

"வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு"

எதற்கு இப்படி சொல்கிறார்?  என்ன?

இது கொ ச்சையா? அன்றி 

பச்சையா? 

இந்த சொல்லாடல் சூ ட்சுமம் புரியாமல் தவித்த வயது. படிப்பறிவு இல்லாத காரணத்தினால் அம்மா இப்படி , கொச்சையாக, அல்லது அசிங்கமா பேசுகிறார் என்று கூட எனக்கு நானே சுய விளக்கம் கொண்டு ,வெட்கப்பட்டு , விலகியது உண்டு. 

எங்கள் வீட்டு எதிரில் மண்ணாங்கட்டி ஐயா , அப்பாவின் பால்ய நண்பர்.சலவையாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாயா, பிள்ளையா குடும்ப பழக்கம் உடையவர். வன்னியர் தெரு மருவி, வண்ணார் வீதி ஆகி இருந்தது. மூன்று வீடுகள், பூர்வீ க சொத்து உரிமையாக இருந்த காலம்.

இதில், எங்கள் குடியிருப்புக்கு எதிர் புறத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். சிமெண்ட் உபோயோகம் அரிதான காலத்தில், கரசூர், தொண்டமாந த்தம் கிராமங்களின் சுண்ணாம்பு  சூலையில் இருந்து , கட்டை வண்டியில் ஏற்றி வரப்படும்  சுண்ணாம்பு. புளிக்க வைத்து,இடித்து,  பக்குவப் படுத்தி எடுக்கும் பெண்கள் ,பாட்டுப்பாடி பூசு வேலைக்கு ஆயத்தம் செய்வார்கள்.

சுமார் ஓராண்டுக்கு மேலாக  , அவசர கதி தவிர்த்து, கட்டு வேலை , பூசு வேலை , மெல்ல,மெல்ல, உறுதியாக நடந்து கொண்டிருந்தது. 

கிராமத்தில் வயல், வரப்பு வேலைகள் இல்லா சமயத்தில் கொத்தனார் வேலை. அது தருணம்,நாட்டுப் புற பாடல்கள் நளினமாக வந்து விழும். உலக் கைகள் தாளத்தில். சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க ,சிரமமின்றி அரங்கேறும்.

பொன்னி ஆயா , கூரை வேயப்பட்ட ,எதிர் வீட்டு வாசற்படியில் குத்தங் காலிட்டு அமர்ந்து உற்சாகமாய் வேலை வாங்கிக் கொண்டு, அம்மாவிடமும் ,வீட்டுக் கதைகள் சன்னமான குரலில் பேசிக் கொண்டிருப்பார்

இந்த உரையாடலில் , குடும்ப பிரச்னை உள்ளிட்ட அம்சங்கள் வந்து இறங்கும்.சுமை இறக்கி வைத்தாற்போல. இதன் மத்தியில் எங்கள் காதில் வாங்கிய வரிதான் இது.

வெய்யிலில் வேலை செய்யும் மேஸ்திரி,சித்தாள் குறித்து, அவர் வேலையின் கீர்த்தி , அல்லது நேர்த்தி சம்பந்தப்பட்டது என்ற புரிதலில் மட்டும் அப்போதைக்கு அறியப் பட்டது.

சில காலம் கழித்து, கடுமையான காற்று, மழையில் ,மோட்டு வலை பிய்ந்து பறந்த கூரை வீட்டில், உள்ளே மழை கொட்ட, இருக்கும் சட்டி, பானைகள், பண்ட பாத்திரங்கள் நீர் பிடிக்க, சிறு,குட்டைகளாக நனைந்தது.

கேஸ் பலகைப் பெட்டிக்குள் கொம்மை வைத்த அடுப்பு வைத்து , பொங்கி சாப்பிட்டு,மழைக் காலத் தை  சமாளித்த பிறகு, வானம் வெளுத்த பின், தென்னை ஓலைக் கீற்று , தேங்காய்த் திட்டில், தோப்பு  கீற்று, பார்த்து  வாங்கி வந்து ,மீண்டும் கூரை போடும் வேலை  எங்கள் வீட்டில் நடந்தது.

கீழிருந்து மேலே ,வரிசையாக ஓலைகளை அடுக்கி ,தென்னை பாலை நாரில் , ஒன்றோடு ஒன்று பிணைத்து, அட்டி, அட்டியாய் வேலை நடக்கும். மூங்கில் கழியில் சொருகி மேலே உயர்த்தி கொடுப்பார்கள்.உயரம் போகப் போக ஏணியில் ஏறி நின்று, ஒத்தாடையுடன் பணி நடக்கும்.

முகடு எட்டியதும், மறு பக்கம் இருந்து கூரை வேயப்பட,  படிப்படியாக, மோ ட்டு வலை மூடுவதுதான்  உச்ச கட்டம். பொதுவாக,மழைக் காலங்களில், சூறைக் காற்று ,கூரை வீட்டில் வசிப்பவர் வயிற்றில் புளியைக் கரைத்து விடும். மேட்டு வலையை பதம் பார்த்து விடும். 

வெய்யில் காலங்களில் குளு, குளு என்று இருக்கும்.அதன் அனுபவமே அலாதியானது. தென்னை நார் கயிற்றுக் கட்டிலில் சொகுசாக அப்பா உறங்க, அவர் சென்ற பின், இடத்தைப் பிடிக்க போட்டியில் நாங்கள் முந்துவோம்.

கோடையில், அவ்வாறு படுத்துக் கொண்டு மோட்டு வலையைப் பார்க்க, சூரிய ஒளிக் கற்றை ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் போல வீட்டினுள் பிரகாசித்தது. இதைப் பார்த்து பரவசப் பட்டு அம்மாவிடம் தகவல் சொல்ல அவரும், "அடடா, மழைக்குப் பின் , மப்பும், மந்தாரமாக இருக்கும் போது கூரை அவசர கதியில் போட்டது. இப்பத்தான் புரியுது, பொன்னி ஆயா சொன்னது. "வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு" , அர்த்தம் "

அட, பேச்சு வழக்கில் நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக, ஒரு வேலையைப் பற்றிய  கணிப்பை, மதிப்பை, மிக எளிமையாக  நமக்கு விளக்கி உள்ளார் என்று உணர முடி.கிறது.

Wednesday, June 5, 2024

சூடு

 கண்டிப்பாய் 

கண்டிப்பு தண்டிப்பில்

முடிந்தால் 

கழுவாய் உண்டா 

சூடு காட்டினாய்

சுடும் என்றறிய

அறியா குழந்தை 

கை பிடித்து 

நடத்திய நீ

புகட்டினாய் பாடம்

என்றாய் 

கேட்ட பாட்டியிடம்

எனக்குத் தெரியாதா

என்றாய்

எட்டி நில் 

தொனியில்

கட்டிப் பிடித்தக் கை

கழன்று கொண்டது 

உறவு அழுத்தம் 

உறக்கம்  தொலைத்து 

கொண்டாட்டம்

 எனக்கு வெற்றி 

உனக்கு வெற்றி

கணக்கு சரி

பிணக்கு சரி

அதிகார மையம் நோக்கி

அரசியல் ஆட்டம் ஆரம்பம் 

வாக்களித்த மக்கள் அணி 

அணியாய் ஆரவாரம் 

அடுத்தது என்ன?

அன்றாடம் திண்டாட்டம்

வாழ்க்கையில் விலகும்

கொண்டாட்டம்

Tuesday, June 4, 2024

மூடும்

 எப்படி நடக்க ?

இப்படி நடக்கும் என்று அறியாத போது 

அப்படி நடந்தது சரியா?

உரிமை உள்ள கை

ஓங்கும் 

அருமை அறிந்த மெய் 

நடுங்கும்

பெருமை பேசிய வாய் 

மூடும்

Monday, June 3, 2024

கொள்ளாதே

 உனக்கென்ன வருத்தம்

பெற்றவர் அறியா பொருத்தம்


உன் கடமை கவனித்துக் கொள்வதே

உழைப்பு நல்குவதே


உரிமை அதிகம் ஆகாதே 

உறவு அழுத்தம்  கூடாதே 


வந்தோம் இருந்தோம் 

வரம்பில் நில் 


தாண்டி வராதே 

தூண்டில் இடாதே 

துயரம் கொள்ளாதே 

Sunday, June 2, 2024

விளங்கிடுவாய்

 கொஞ்சுவாய் 

கெஞ்சு வாய்  ஆசையுடன்

அஞ்சுவாய் 

அடக்குவாய் அன்புடன்

கண்டிப்பாய் 

தண்டிப்பாய்  பொறுப்புடன் 

வெறுப்பை விலக்கி 

விருப்பு துலக்கி 

விளங்கிடுவாய் 

நிழல்

 நினைவுகளின் சு மையில்

நெடும் பயணம்

இமைகள் கன த்திடும்

தேடும் வானம் 

தொலைவில் 

எல்லை இல்லை 

இலக்கு

தொ லைந்து போகவில்லை 

உம் நிழல்


Saturday, June 1, 2024

பக்குவம்

 கொதி நிலை அறியா 

குதி நிலை 

நம் கதி நிலை 

விதி நிலை இதுவே 

வேறில்லை 

பதி நிலை  என்பதும் 

பக்குவமே 

பிறப்பாய்

 உணர்ச்சிப் பெருக்கில் 

ஊன்றி

புணர்ச்சி ப்பிழிவில்

புல ர்ந்தவன்   

நீ

தளர்ச்சி இழையில் 

தறி யாடி 

வளர்ச்சி குன்றி 

மலர்ச்சி இழந்தவன்


முயற்ச்சி உணர்வில்

உள் வாங்கி

முண கல் போக்கு 

பின் வாங்கி 

பூத்திடுவாய், காய்த்திடுவாய்,

கனி ந்திடுவாய்  

இப் பிறவியிலேயே 

ஒரு 

மறு பிறப்பாய்


Friday, May 31, 2024

நாடுவார்

 எல்லா கொடுமையும் இழைப்பார் 

ஏதும் அறியாதது போல முழிப்பார் 

நாள் தோறும் வேடம் எடுப்பார்

நாடக நடிகர்  இவரிடம் தோற்றார் 

மக்கள் அளித்திடும் வாக்கு  வாங்கி

அளி த்தவருக்கே  அழிவைச் சேர்ப்பார்

அதற்கும் ஒரு நியாயம் தருவா ர் 

எதற்கும் பிழியும் சாயம் 

இதற்கும் 

வாயடி,  கை அடி

வலசை முழக்குவார் 

வக்கிரம் மறைய 

விக்கிரகம் நாடுவார் 



Tuesday, May 28, 2024

இழக்குமா?

 இதற்கும் பழகிடுவாய்

நீ

எதற்கும் வளைந்த மெய் 

ஏன் என்று கேளாத வாய்

உண்பதற்கே மட்டும்  

உணர்ந்த பொறி 

பழக்கம் விலகி

இயக்கம் ஏற்குமா 

இன்

செவி உணர்வு 

இழக்குமா 

குண்டுகளின் காலம்

 

துடுக்கு 

துன்பத்தை 

அடுக்கு


ஒடுக்கு 

ஓங்கிய மிடுக்கு

உரிமை அடக்கு 


உள்ளத்தில் கிறுக்கு 

ஓராயிரம் கொடுக்கு

உன்னிடத்தில் இருக்கு 


வண்டுகளின் காலம் போய்

குண்டுகளின் காலம் !


குவலய நீலம் போய் 

குருதியின் நீலம்!


வறண்ட பாலையில்

வளம் சேர்க்கும் !


வளம் மிக்க பூமியில் 

குளம் சேர்க்கும் !


இழப்பை எண்ணிக்கையில்

ஏற்கும் 

புள்ளி விவரம் அள்ளித் தரும்


புது உலகம் இதுவென்று ஓதும் !


ஏதம் இழைத்திடும் 

பெரு வணிக வேதம்


வெட்டியான் வேலை கூட்டும் 

 ஆயுத பேரம்


அமைதியை தூக்கிலிடும்

அணு தினமும் 

அடுத்தவன் நாட்டில்


எதற்கும் கை   தட்டும் 

ஆதிக்க கை கள் 


சரவெடியாய் 

சந்தோசம் கூட்டும் !

Monday, May 27, 2024

வாழ்வடி

 அவன் ஏ ன் இப்படி?

எப்படி?


தப்படி

தம்பிடி தளர்ந்த

தாழ் படி

வரும்படி இழந்த 

உருப்படி


இவன் படி !

இப்படி!


வரும் படி

உயர்ந்த 

வாழ் படி

வளர் படி

Sunday, May 26, 2024

சுண்டு விரல்

 ஒரு சுண்டு விரல் முனை நசுங்கி, வளைவாக இருப்பது , அவள் கவனத்தை, வெகு காலம் கழித்து இப்போது தான் ஈர்த்தது. 

பள்ளி செல்லும் பருவம், தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்று மொழியில், அப்பாவின் ஆசைக்கு இணங்க, சேர்ந்து பயின்று வந்த சமயம் .கிளிப் பிள்ளை போல் ஆங்கில மொழி பாடல்கள், தத்து பித்து என்று, வயது ஒத்த பிள்ளைகளுடன் பாடி, ஆடி திரிந்த பொழுது.

கோடை விடுமுறை சற்று ஏ றக்குறைய இரண்டு மாதம். சலிக்க வெய்யிலில் விளையாடுவது.பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப் புல், கபடி, கண்டேன்,கண்ணாமூச்சி, தாழ்வான பூவரச மரங்களில் ஏறுவது, அதன் இலைகளில் பீ ப்பி ச செய்து ஊதுவது, குச்சியில்  வில், அம்பு செய்து மர த்தி ல் எய்து விளையாடுவது ,இப்படி எண்ணற்ற ஆட்டங்கள்.

இவைகளுக்கு மத்தியில், நண்பர்கள் வீட்டில் பல்லாங்குழி, தாய கட்டை விளையாட்டு. பெரியவர்கள் ஆட வேடிக்கை பார்ப்பது,  சந்தர்ப்பங்களில் ஆள் இல்லாத நிலையில், உதிரியாக ,அணியில் இடம் பெறும் வாய்ப்பும் உண்டு.

சில நேர்வுகளில் அவரவர் பள்ளியில் கற்ற பாடல்களை பாடி, ஆடுவதும் உண்டு. இந்த வாய்ப்பு எனக்கும் நாய்க்கர் வீட்டு பிள்ளைகளுடன் பாட வாய்த்தது.

 மர சாய்வு நாற்காலியில் சாய்ந்து, தன்னை மறந்து , குரல் எடுத்து பாடுவது அலாதியானது.  நாய்க்க ர் இல்லாத போது அதில் அமர்வதே தனி அந்தஸ்து தான்.

ஒரு  மே மாத  பிற்பகலில் எங்கள் கச்சேரி அரங்கேற சில மணி நேரத்தில் ஓய்ந்து முடிவுக்கு வந்தது. 

அது சமயம்,  நான் எழுந்திருக்க, வலது கையை கத்தரி போன்ற சாய்வு நாற்காலியில் இருந்து எடுப்பதற்குள் ,அவசர அவசரமாக ,முத்து,. சுறு,சுறுப்புடன், சுணடு விரலுடன் சேர்த்து அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை மடக்கி விட்டான்.

என்ன சோதனை இது. உடல் எழுந்து விட, வலது கை தொங்கிய நிலையில் மேலே எடுக்க முடியாமல், மாட்டிக் கொண்டது. கிடுக்கியில் மாட்டிய பாக்கு போன்று நசுங்கிய விரல் தசை பிய்ந்து, இரத்தம் பீச்சிட, வலியால் துடித்த அலறல் சத்தம் உடன் இருந்தவர்கள் பயத்தில் பட படக்க, தெருக் கதவைத் தாண்டியது என்  ஓட்டம். அரைக்கால்  சட்டையும் ஆங்காங்கே நனைந்தது.

இரண்டு வீடு தள்ளி இருக்கும் என் வீட்டிற்கும் என் ஓலம் கேட்டது. மதிய உறக்கத்தில் இருந்த என் தந்தை என்னை நோக்கி ஓடி வந்து வசவுடன் முதுகில் இரண்டு சாத்து சாத்தி,  ரிக் ஷா வாண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

உயர்ந்த சீலிங் உள்ள, பெரிய  மண்டை கொண்ட மின் விசிறி காற்றை வாரித் தள்ள, உயரமான மேசை மீது மல்லாந்து படுக்க வைத்தனர்.ஆபரேசன் செய்வார்கள் என பயத்தில் என் அழுகை மேலிட. கட்டு மட்டும் போட்டு தைக்காமல் வைத்தியம் செய்து அனுப்பினர்.

அன்றிரவு முழுவதும் வலி. தூங்க முடிாமல் துடித்துக் கொண்டிருந்த என்னை, பாட்டி, வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் அவர் மடி மீது சாய்த்து,கதை சொல்லி, பாட்டுப் பாடி மெல்ல தூங்க வைத்தார். ஆற டிக்கு துடிக்க உயரம், மாநிறம். உலக்கை பிடித்த கை, கூழ் துழாவிய, நெல் அவித்து ஊட்டம் தரும் தோற்றம்.

பம்பை, உடுக்கை சத்தம் கேட்டால் மருள் வந்து குல தெய்வம் -மதுரை வீரன் - குறி சொல்லும். மலையேற கற்பூரம் ஏற்றி அவர் கையில் அம்மா கொடுக்க, அதற்கு முன்பாக சொல் என்று வாக்கு கேட்டு, சாந்தி அடைவார்.

சில நிமிடங்கள் கழித்து, முகத்தில் தண்ணீர் தெளிக்க, தூ க்க கலக்கத்தில் இருந்து எழுவார் போல் விழிப்பார். 

ஆறு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த வாழ்க்கை கதை, மனதின் பெட்டகத்தில் இருந்து நிகழ் காலச் சக்கர ஆரத்தில், இணை யாள்  சுண்டு விரலைப் பார்த்து வினவிய போது தற்போது பதிவேற்றம் காண்கிறது.

Thursday, May 23, 2024

நிற்காதே

 பொறுத்துக் கொள் 

எதையும்

புரிந்து கொள் 


சகித்துக் கொள்

எதையும் சமாளித்து

நில்


சரிந்து விடாதே

சந்தி சிரிக்க விடாதே


வரிந்து கட்டி 

வம்பு அளக்காதே


வாங்கி கட்டி 

வழிந்து 

நிற்காதே


Tuesday, May 21, 2024

ஒப்பா செயல்


இறப்பு 

இரங்கலு க்கு உரியதே!

போர் ஆயினும் 

விபத்து ஆயினும் 

பொல்லாங்கிற்கு 

இடமில்லை !


ஓர் உயிர் உருவாக்கிய

படைப்பின் உழைப்பை

இயற்கையின் ஏற்பாட்டை

உடைக்கும் உரு குலைக்கும் 

அதிகாரம் இல்லை 

எவருக்கும்!


அவர் இவர் 

என்ற பேதம் 

இசம் 

தேசம்

சமயம்

மதம் இதில்

நேயம் அற்றதே !


பிறர் இறப்பில் 

களி கொள்வது

வாய் மெல்வது 

விலங்கு ஒப்பா செயல்!

Monday, May 20, 2024

" ஓயா ம அடிப்பானா ம்"

 " ஓர் ரூ பா கொடுப்பானாம் ஓயாம அடிப்பானாம்"

அம்மா சில சந்தர்ப்பங்களில் உதிர்க்கும் சொற்றொடர். அவரது அகராதியில் வந்து விழும் பல மொழிகள், அவை பழமொழியா? மரபுச் சொல்லா? அப்போது புரியாது.

குடும்ப பாரத்தை சுமக்கும் அவளுக்கு,  போதாமை, துயரத்தின் வெளிப்பாடாக அப்பாவிடம் குமுறும் போதும், வார சம்பளத்தை சரிவர செலவுக்கு தராத நல்லுவன்( நடுப் பிள்ளை)ஆகியோரிடையே மல்லுக் கட்டும் போதும் இந்த சொலவடை இயல்பாய் வந்து  விழும்.

ஓரிரு சமயங்களில் இதற்குரிய அர்த்தத்தை கேட்கும்போது  கோபக் குறி தளர்ந்து. " அதுவா,  அது ஒண்ணும் அசிங்கமான வார்த்தைகள் இல்லயப்பா" என்று ஆரம்பித்து, கிராமத்தில் சாவு சேதி சொல்லும் பறை சாற்றி க் கு ,  ஊர் சொல்ல, சாவு விழுந்த பொழுதிலிருந்து, சவ அடக்கம் செய்யும் வரையிலும் வாங்கிடும் உழைப்பிற்கு ஏற்ற கூ லி தராமல், எட்டும் எட்டாமல் கொடுக்கும் பணம் குறித்த , பழமொழியே என்று விளக்கி டுவார்.

எனக்கு, தாய் மொழி அகராதியை திறந்து வைத்தவர்  " அம்மா மொழி" ,அத்தியாயத்தை ஆரம்பித்து சிந்திக்க வைத்தவர் என்று கூறினால் அது மிகையாகாது.

தொண்ணூறு ஆண்டுகளில் பயணிக்கும் அவளிடம் நமது மொழியின் மரபுச் சொற்கள், சிறந்த சொல்லாடல்கள் யாவும் அருகி வரும் மரபுச் செல்வங்களே!

Sunday, May 19, 2024

ஏங்கிடு....

 அவர் நிலைதான்

 உம் நிலையும்

இவர் நிலையும்

முதுமையில்

கவனிப்பார் அற்ற

தனியனாய் 

இல்லம் பெரிதாயினும்

உள்ளம்  கடுகு அளவே 

தள்ளாடும் பருவம்

தளர்ச்சி அடைந்த உருவம்

பல வேளை பங்கிட்ட நீ

ஒரு வேளை உணவுக்கு 

ஏக்கம்

இமைகள்   வீங்கி

ஏங்கிடும் தூக்கம்


Saturday, May 18, 2024

சொல்

 சொல் 

அதன்படி நில்

 செல்

அதன் அடி  சொல் 


அடி மேல் அடி

செயல்

ஆழ்ந்து அறிந்து

முயல் 

அனுபவத்தின்

இயல்

நாசம்

 யானையைப் பிடித்த மதம்

யாரைப் பிடித்தாலும் ......

Thursday, May 16, 2024

இதுவென....

 இங்கிருந்தால் அங்கிருக்கும்

அங்கிருந்தால் இங்கிருக்கும்

எங்கிருந்தாலும் 

ஏ க்கம்

 கூ டியிருக்கும்

தூக்கம் தொலைந்து 

இருக்கும்

துன்பம் சூழ்ந்திருக்கும்

இன்பம் இடையிடையே

மின்னல் போல் 

சன்னல் திறக்கும்

இன்னல் இருள் போக்கும்

இயல் வாழ்க்கை 

இதுவென காட்டும்.

Monday, May 13, 2024

இல்லை

 தெரிந்தும் பலன் இல்லை

தெரியாமல் முடிவு இல்லை 


அறிந்தும் அறிவில்லை

அறியாமல் ஆவதில்லை


உணர்ந்தும்  உயரவில்லை

உணர்ச்சியில் புரியவில்லை 


ஏமாந்தும் புரியவில்லை 

ஏ ன் என்று விளங்கவில்லை 


பகையும் வெளியில் இல்லை

புகையும் நெருப்பும் வேறில்லை


தெரியாமல் விளைவு இல்லை 

தெரிவதும் தொலைவில்  இல்லை 


என்னை புரிந்து கொள்

உன்னை புரிந்து கொள் 

உள்ளதை புரிந்து கொள்

உண்மையை புரிந்து கொள்


இருப்பதை ஏற்று

இருப்பை வைத்து

பொறுப்பை சுமத்தி


Sunday, May 12, 2024

குடும்பம்

 தனி மனித சுதந்திரம்,  ஒரு கோணத்தில் பார்த்தால் ,குடும்ப அளவிலேயே முதலில் அடி வாங்குகிறது, கட்டுப் படுத்தப் படுகிறது என்று கூறலாம்.

இதை செய்யாதே, அதை செய்யாதே; இங்கு செல்லாதே,; அங்கு செல்லாதே. நாங்கள் விரும்புவதை  நிறைவேற்று என்று குழந்தைப் பருவம்  முதல் ,குமரப் பருவம் வரை திணிக்கப்படும்  நெருக்கடி. திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது  என நீண்டு இந்தப் பட்டியலில் சேரும் கூடுதல் அம்சம். 

கூட்டுக் குடும்பத்தில்  , பிரதமர் போல சர்வ வல்லமை அதிகாரம் செலுத்தும் தந்தை, எதையும் செயல் படுத்த,முடிவு செய்ய முடியும். குழந்தைகள் உரிமை, பெண்ணுரிமை இவையாவும், , இழந்து விட்டதைப் பிடிக்கும் , சலுகை வேண்டும் முயற்சியே ஆகும்.

  அரசாங்கம் நிபந்தனைகள் போடுவது ஒரு புறம் இருக்க, . குடும்ப உறவின் உளவியல் என்பதே விருப்பத்தை இழப்பது, விட்டுக் கொடுப்பது என்னும் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு. அதை மதிப்பீடாக தொகுத்து நிலை நிறுத்தி விட்டது.

இதில் பல எதிர்ப்புக் குரல் சனநாயகம் வேண்டி,குடும்ப அமைப்பிற்குள் பன்னெடுங்காலமாக, தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருப்பதைஅறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவை கலகக் குரலாக, அதிகாரத்தை எதிர்க்கும் சக்தி யாக,               ஒடு க்கப்பட வேண்டிய, கட்டுக்குள் வைக்க வேண்டியதாக இனம் காணப்படுகிறது.

விதிமுறைகள், ஒழுங்கு இயக்க முறைமை குடும்ப  நிர்வாகத்தில் பொதுவாக கையாளப்படும் என்றாலும், நுட்பமாக அதிகாரம் செலுத்தும் முறை சனநாயக த் தன்மையில் இருந்து விலகி, ஆளுமை அதிகாரம் செலுத்தும் ஏற்பாடாக விளங்கி வருகிறது.

ஒரு வேளை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின்

நுண்ணியல் கூறாக குடும்ப அமைப்பை புரிந்து கொள்ள முடிகிறது .


Thursday, May 9, 2024

ஆடும்

"நீ!  ரொம்ப கெட்டு விட்டாய்"

 விழும் சவுக்கு 
சண்டி குழந்தைக்கு

ஒண்டிக் குழந்தையை 
உயர்த்திய வாய் 
ஒய்யாரமாய் குலவிய 
வாய்

கண்டிப்பில் 
களம் ஆடும்

கலங்கி நிற்கும்
பாட்டி  மனம்

பிடி

 குரங்கு பிடி என்பார்

குழந்தை பிடி 

எப்படி?

விரல் சப்பும் பருவம்

பிடிக்குள் நம் விரல்

அவர் துணி யாவும்

குழவியிடம் 

பிந்தும் 

மந்தி 

Tuesday, May 7, 2024

விக்கும்

 பேச தெரிந்தவன் நீ !

பேசாமல் இரு

கூசாமல் சேரும் 

குறை


பேசுவது பிழையே

சில  நேர்வில் 

படும் பொருள்

உடன்பாட்டில் ஏற்பு

ஈர்ப்பு

முரண்பாட்டில்

முட்டல்.  

முனகல் 


பொத்திய வாயாக

கத்திய வாய்.

கதவடைக்கும் 

கலங்கி விக்கும்



ஊடும் ,உறவும்  

பாவும் ,கரவும் 

தறியாடும்

வாழ்க்கை நெசவில் 



கணக்கன்

 கணக்கில் சுழி

கல்வியில் கழி

தே றா  மொழி 

பிறன் பயன் 

கொள்வதில்

  கொழி