கிறீச்சிடும் ஒலிகள்
ஓயாது இரைந்திடும் ஒலிப்பான்கள்
உண்டாக்கும் சலிப்புகள்
சப்தத்தின் உள் கரைந்திடும்
குழந்தைகள் விளையாட்டு ஒலிகள்
இரைச்சல்,கரைச்சல்,கும்மாளம்.குதூகலம்
யாவும்,
சலிப்புகளுக்கு
காகங்களும் விலக்கல்ல-
எஞ்சிய மரங்களில்
துஞ்சிய உயிர்கள்-
வாடகைக் காரனின் குடியிருப்பு போல்
எப்போது காலியாகுமோ
பதட்டத்தில்
காலங்கள் கழியும்
நிம்மதியின்றி
No comments:
Post a Comment