Monday, March 29, 2010

சலிப்பு

கிறீச்சிடும் ஒலிகள்
ஓயாது இரைந்திடும் ஒலிப்பான்கள்
உண்டாக்கும் சலிப்புகள்

சப்தத்தின் உள் கரைந்திடும்
குழந்தைகள் விளையாட்டு ஒலிகள்

இரைச்சல்,கரைச்சல்,கும்மாளம்.குதூகலம்
யாவும்,

சலிப்புகளுக்கு
காகங்களும் விலக்கல்ல-

எஞ்சிய மரங்களில்
துஞ்சிய உயிர்கள்-

வாடகைக் காரனின் குடியிருப்பு போல்
எப்போது காலியாகுமோ

பதட்டத்தில்
காலங்கள் கழியும்
நிம்மதியின்றி

No comments: