ஒத்துப்போவது
உணர்வு செத்துப் போவது
கற்றது போதாது
கல்லாதது ஏறாது
உற்றுப் போவது
அற்றுப் போவது
அருகில்
விட்டுப் போவது
ஒத்துப்போவது
உணர்வு செத்துப் போவது
கற்றது போதாது
கல்லாதது ஏறாது
உற்றுப் போவது
அற்றுப் போவது
அருகில்
விட்டுப் போவது
வேலை வாங்குவார்
வேண்டிய போது
கெடு விதிப்பார்
தொடு திரை கணினியாய்
தொழில் சேர்ப்பார்
கலை இலக்கிய உலாவில்
அணி சேர்வார்
தனிப் பெருமை
நாட்ட
தாளம் போடுவார்
பிறர் உழைப்பும்
உரிமம் சேர்த்து
ஊடக பெருமை
வே ட்டகம் தோ ற்கும்
பூட்ட க மனிதர்
குளிர் கால குளுமை
சுழியம் செல்ல
கும்மிருட்டு
விசும்பின்
விக்கல்
குடை விரிக்கும் முன்
தாகத்தில் தாளம் போட
போர்த்திய ஆடை
நேர்த்தி போ தாயாம்
பனித் துளிகள்
வாழ்த்தில்
'பாலி கிளினிக் '
படியில்
"மைலா" வரவை
தரிசிக்க
"புளுவா "மாலை
வெறுப்பே ற்க
விரையும் மனம்
பொறு ப் பே ற்க
கரையும்
உரைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
உரைக்கும் விதமா !
நடக்கும் விதம் ?
முதுமை வரமா? சாபமா?
குடும்ப அமைப்பில்
இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!
தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !
பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.
தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம் தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்
கவனம் பெறுகிறது.