Sunday, December 3, 2023

வரமா ? சாபமா?

 முதுமை வரமா? சாபமா? 

குடும்ப அமைப்பில்

இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!

தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !

பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.

தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம்  தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்

கவனம் பெறுகிறது.


No comments: