கடு கடு முகம்
கனி வுடன் முரண்
சிடு சிடு முகம்
சினத்துடன் அரண்
வெடு வெ டு பேச்சு
வெல வெலப்பு மூச்சு
வேண்டியது போச்சு
கடு கடு முகம்
கனி வுடன் முரண்
சிடு சிடு முகம்
சினத்துடன் அரண்
வெடு வெ டு பேச்சு
வெல வெலப்பு மூச்சு
வேண்டியது போச்சு
சகிப்பு த் தன்மை அறிந்த நாம், அதன் வழி செல்வதில் தடுமாற்றங்கள் பல. எளிதில் விலகுவது, நியாயம் கற்பிப்பது அதிகம். சற்று நிதானித்து நின்று யோ சித்தால் அதன் அர்த்தம், மதிப்பு விளங்கிடும்..
குடும்பம் தொடங்கி, சமூக வாழ்க்கை வரை ஒரு நெடிய போராட்டம் ஊடே நகர வேண்டிய அவசியம் இந்த உணர்வு மனிதர்களிடையே நிலைப்பதற்கு, அதன் படி அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு அத்தியாவசியம்.சமூக நல்லிணக்கத்தை சாதிக்கும் அருங் கருவி சகிப்புத் தன்மை ஆகும்.
பொறை யுடமை குறித்து வள்ளுவம் பகர்வதும் இது குறித்து தான்.மனப்பாடம் அளவில் தேர்வோடு நின்று போன விழுமியங்களில் இதுவும் ஒன்றாகும்.
உலக அரசியல் களத்தில் கூட இது, அருகி வரும் பண்பாக நிலவுகிறது. கள முனைகள் அரங்கேறி, வளங்களை அழித்து ,உயிர்களை இலட்சக்கணக்கில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கடுமையான போக்கிற்கு விரைவாக செல்கிறது.
நியாயம் கற்பிக்கும் பாடங்கள் பல சாதி, சமய, மத, பொருளியல் கோணங்களில், பல உலக மன்றங்களில் வைக்கப்படுகின்றன.
எட்டி இருந்தேன்
எட்டி இல்லை
சுட்டி இருந்தேன்
சூ து இல்லை
கட்டி இருந்தேன்
கவடு இல்லை
முட்டி இருந்தேன்
மூ டம் இல்லை
வெட்டி இருந்தேன்
வெறுப்பு இல்லை