Sunday, March 11, 2007

வெளிச்சம் இல்லை!

"கா விளக்கு" வெளிச்சமும் கண்டதில்லை!
கால் இரண்டு நூற்றாண்டில்!
கால் ஒடிய உழைப்பிலும்,
கஞ்சிக்கும் வழியில்லை!
கழனியும் சொந்தமில்லை!


காவிரியில் நீர் வந்தாலும்,
கலயம் நிறைய வாய்ப்பில்லை!
முடக்குத் தண்ணி,
மூச்சிரைக்க, குடிக்க
ஏதும், உறுதியில்லை!


உறுதியாய் ஒழிந்துவிடும்!
ஒரு பத்தாண்டுக்குள்,
வறுமையும்! நாட்டினுள்!
நம்புங்கள்! வாழ்க்கை இதுவே!
நலமுடன், ஒளிரும் இந்தியா!


நாட்டின் தேர்தலை எண்ணி!
தொய்விலா முழக்கம்!
பழகிப்போச்சு எங்களுக்கு!
பாழடைந்த கண்களுக்கு!


கவர்ச்சி பேச்சில்,
உரிமை விட்டெறிந்து,
அடிமையாய்,
அய்ந்தைந்து ஆண்டுகள்,
அதற்கும் குறைவாக,
சாசனம் எழுதி,
விமோசனம் இழந்து
வீதியில்!


விடியாது,வீணாகும் வாழ்க்கை!
வீரத்தமிழர் நாங்கள்!
சூரத்தமிழர்!
நைந்து போகும்,
மண்ணின் மைந்தர்!!

No comments: