கடைத் தெரு நடு வீதியில்,
கால் விரித்து, சாய்வாக,
படுத்திருந்தது குட்டி!
பக்கவாட்டில் சென்று பார்த்தேன்!
ஓடி உறைந்திருந்தது இரத்தம்!
வாகனங்கள், இப்படியும் அப்படியும்,
விரைந்து கொண்டிருந்தன!
மக்களை சுமந்து!
நேயம் மறந்து!
மனிதனே அடிபட்டு, மிதிபட்டு,
சாலையில் கிடந்தாலும்,
மறக்காமல் தன் வினையாற்ற,
விரைந்திடும்,
மனிதர் மத்தியில்,
விலங்குகள் என்ன,
விலை மதிப்பற்றவையா?
மனோநிலை, விரிந்திடும் சமூகத்தில்,
உள்ளுணர்வு
வேண்டாத பண்புகள்!
No comments:
Post a Comment