Monday, March 12, 2007

மனம்...

ஆர்த்தெழும், அமைதியுறும்,
சீறும், சீண்டும்,
அலைக் கழிக்கும்
உலைக்களம், ஆகி நிற்கும்.



எஞ்ஞான்றும் எம்பும், எகிறும்,
நெம்பும், வெம்பும்,
வெந்தணல் புழு போல் வாட்டும்,
வதைக்கும்.



விதைக்கும் வீரியத்துடன்,
விளைநில, பயிர்போல் முளைக்கும்,
கிளைக்கும்.



செடி, கொடி, மரம் போல்,
பூக்களுடன் காய்க்கும்,
காய்த்துக் குலுங்கும்.



பழுக்கும், பறிக்காது, பழுதில்லாது,
நிலத்தில் சில வேளையில்,
மீண்டும் முளைக்கும், வீழ்ந்து,
முற்றியதால்.



சோதிக்கும், சாதிக்கும்,
புடம் போடும்,
புரியாத புதிராகும்,
புதிருக்கு விடையாகும்.



புத்தாக்கம் ஏற்றிடும்!
தொடர் வினயாற்றும்!
தோற்காத படைக்கலன்!

No comments: