கொளுத்துகிறார் கற்பூரம்.
வெளியே, தார்ச்சாலையில்.
கண்ணார் கழிப்பதற்கு.
வாரந்தோறும் வரிசையாய்.
போட்டிப்போட்டு.
வெளிச்சம் என்னவென்று,
வெளியே வந்து பார்ப்பவர்,
துப்பிவிட்டு, தப்பிவிடுவார்.
தம் வீட்டுக்கதவை தாளிட்டு,
வந்த வேகத்தில்.
'இவன் இப்படித்தான்',
'நம் வீட்டுக்கு நேராக',
'செவ்வாய்க் கிழமைகளில்',
'அவள் ஞாயிற்றுக்கிழமைகளில்',
ஓயாது, இவர்கள் ஓலம்.
ஒவ்வொரு நாளும்.
No comments:
Post a Comment