வயோதிகம் தடையில்லை!
நடக்கிறார் நாள் ஒன்றுக்கு
இருபது மைல்,
பத்து கடற்கரை மாநிலங்களை
கடக்க, பற்று கொண்டு,
இரு பத்து கிலோ
உடமைகள் சுமந்து,
வங்க 'பட்டச்சார்யா'
மேற்கு,தெற்கு, கிழக்கு
வடக்கு, என திசைகளைக்
கடந்து,
மலையேற்றம் செய்து,
உடல்வளம் குன்றியவரை
ஒருங்கிணைத்து,
மன வளம் கூட்டுகிறார்.
அருணாசலம் முதல்
இராவணேசுவரம் வரை,
ஒருமைப்பாடு,மதச்சார்பின்மை
கண்டிடும் முயற்சியில்,
தீண்டாமை
தீயைக் கண்டார்,
ஒரிசா மாநிலத்தில்.
'ஓயவில்லை சாதிய ஒடுக்குமுறை',
ஓய்வு பெற்ற ரயில்வே பொறியாளர்
கிழக்கின் வெளிச்சத்தை
செய்தியாளர் மன்றத்தில்
சேர்ப்பித்தார்
உணர்வுடன்.
நூற்றாண்டு வங்கப் பிரிவினை
முன்னேற்றம் கண்டனரா?
விடுதலைக்குப் பின்
'கடவுளின் குழந்தைகள்'
குறைந்த பட்சம்
கடற்கரை மாநிலங்களில்.
உப்பங்காற்றும், உயர்வளிக்கவில்லை!
தென்னங்காற்றும், தெம்பளிக்கவில்லை!
அரசியல் காற்று மாறி,மாறி
அலைக்கழித்ததைத் தவிர!
No comments:
Post a Comment