பொழுது போக்கிற்கான தீவனமா, இவை?
மக்கள் சிலர் எழுதுவதற்கா?
கலைகள் படைப்பதற்கா?
திரைப்படம் எடுப்பதற்கா?
அழுவதற்கா?
ஓவென்று, வாய்விட்டு குரல் எழுப்புவதற்கா?
பின் சென்று, இல்லத்தில்,
குண்டு வீச்சுகளின் மத்தியில், சிதைந்து, எரிந்து,
மண்ணுடன், மண்ணாகிப் போக,
எத்தனை தலைமுறைகள்,
இசுரேலின் பயங்கரத்தினூடே வாழ்வது?
எமது பெற்றவர்கள்,
பரம்பரை வாழ்வு,
நினைவு, மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது,
... மீண்டும்...மீண்டும்...
எத்தனை முறைகள், 1948?
(மொழி பெயர்ப்பு கவிதை)
No comments:
Post a Comment