நாம் குதிரைகளே!
பந்தயக் குதிரைகள்.
நம் மீதும் எண்கள்,
ஜாக்கிகள்,முதலாளிகள்.
பேசும் குதிரைகள்.
வளவளவென்று,
தொண தொணவென்று.
பந்தய நேரம் அதிகம்.
மிக விசாலமான ஆடுகளம்.
பந்தய முடிவின் பலன்,
குதிரைகள் அனுபவிக்கின்றனவா?
ஆட்டத்திற்கு ஆட்டம்,
தள்ளுபடி செய்யப்படும்,
குதிரைகளும் உண்டு.
சொத்தை என்று சொள்ளையென்று.
நாமும்,
கழித்துக் கட்டப்படுகிறோம்.
நீதி மன்றங்கள் எங்கே?
தடை ஆணைகள் எங்கே?
நினைவுச் சின்னங்கள் எங்கே?
No comments:
Post a Comment