Thursday, January 19, 2012

'தானே' ஆயிரம்

வீடற்றோர் ஆயிரம்
வீடுற்றவர் ஆயிரம்
வீதியில் நின்றவர் ஆயிரம்
விடுதியில் நின்றவர் ஆயிரம்

கூரை கவிழ்ந்தவர் ஆயிரம்
கூடத்தில் அமிழ்ந்தவர் ஆயிரம்
ஓடம் இழந்தவர் ஆயிரம்
ஓரம் அமர்ந்தவர் ஆயிரம்

அலுவல் இழந்தவர் ஆயிரம்
அலுவல் அமர்ந்தவர் ஆயிரம்
மரம் இழந்தவர் ஆயிரம்
மறைவில் நின்றவர் ஆயிரம்

கழனி அழிந்தவர் ஆயிரம்
கனவில் மிதந்தவர் ஆயிரம்

அனைவருக்கும் ஆயிரம்
யாருக்கும் ஆயிரம்
ஊருக்கும் உனக்கும்
எனக்கும்

வானம் தந்த ஆயிரம்
'தானே'
ஆயிரம்

No comments: