Friday, January 6, 2012

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஒரு தனி மனிதன், அடுத்தவருடன் பேசுவது, பழகுவது, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பது ஏன் பிடித்தமில்லாது போகிறது. நம்மையே நாம் சரியாக உணர்ந்து கொள்ளாது, விளங்கி கொள்ளாதபோது, அடுத்தவரின் அசைவுகள், இசைவாக இல்லை, நசையாக இல்லை என அல்லல்படுவது, ஆர்ப்பரிப்பது
ஏன்?

சக மனிதன் குறைகளை அளவீடு செய்ய முயல்வது, நிறைபோடுவது எவ்வளவில் பண்பான அணுகு முறையாகும். குறைகள், பலகீனங்கள், பக்குவின்மை கூறுகள் சராசரி மனிதன் யாரிடமும் காணக்கூடிய, பொதிந்துள்ள, இயல்பான குணங்களாகும்.

காலப்போக்கில், பட்டறிவு வாய்ப்பில் சீர்செய்து கொள்ள வாழ்க்கை அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. அதனை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி, சுய திருத்தம் செய்து, வாழ்கைப் பயணத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முற்சி, முனைப்பு, நேர்மறை வாழ்க்கை பாடங்கள் , மோதல் தவிர்த்த மனிதாபிமான பழக்கங்கள் தான் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

No comments: