தென்னை இருந்தது
திண்ணை இருந்தது
கிணறு இருந்தது
மழை நீர் சேர்ந்தது
மரம் இருந்தது
நிழல் சேர்ந்தது
தொட்டி கழிவறை
அடுப்பு எரிக்கும்
சாம்பலில் நிறைந்தது
பருவ முறையில்
விளை நில
எருவுக்கு சென்றது
சாலவம் தவளைகள்
இருப்பிடம் ஆனாது
கொசு என்பதே
அறியாமல்
ஈக்கள் மட்டும்
வீடுகளில், வீதிகளில்
உலா வந்தது
தெருவெங்கும்
குழந்தைகள்
விளையாட்டு
குதூகலம் சேர்த்தது
மின் வசதி ,
எங்கோ ஒன்று
புழுக்கம்
இரைச்சல்
அருகி நின்றது
சாணம் மெழுகிய
இல்லம்
சந்ததி சேர்த்தது.
No comments:
Post a Comment