Thursday, March 13, 2008

அம்பலம்!

நாதியற்றாய்! நடுத்தெருவானாய்!
வீதியுற்றாய்! விதியை எண்ணி!
ஆதி காலந்தொட்டே!

அன்னியர் வருடியாய்!
புண்ணியர் பாதங்களில்!
பண்ணிய பாவங்களை
மறந்து!

போன பெருமையைப்
பேசிக் களித்தாய்!

எட்டி நின்று!
எழுந்து நிற்கும்
எம் தோழர்!

உமக்கு எட்டியாய்!
பெட்டி பாம்பானாய்!

மகுடியைத்தேடி
உம் ஆட்டம்!
பகடியைப் பாராது
பகடானாய்!

வல்லூறுகளின் வதையில்!
வாள் வலி தேடி!
நாடி நரம்புகளில்

சூடு ஏற்றி!
நம்பிகை அளித்து!

தும்பிகையானை
தொலைவில் வைத்து!
துமிக்கியின் முன்
எந்திரக் கூட்டங்களின்
முன்!

தந்திரம் பயின்று!
திறம் கூட்டி!
தமிழ் நிலம் காட்டி!

தன்னை இழந்து
மண்ணை மீட்கும்!
மாட்சிமைப் போரில்!

தன் பெருமை கூறி!
தன் நிலைக் காட்டாது
கவனமாக!
தமிழ் அடையாளம்
என்பாய்!

அடுத்தவன் சிரிக்க!
அம்பலம்!
உன் பெருமை!

No comments: