Sunday, November 12, 2023

செம்புலம்!

 சிந்தும் குருதி-

சிவப்புதான்

எவருக்கும் !


குழந்தைகளை கொல்வது

உயிர்த்திடும் குழவிகளை

மருத்துவ 

மனைகளில் 

சிதைப்பது


காக்கும் மருத்துவன் -

பொதுவானவன் 

புரிபவனுக்கும் 

 படுபவனுக்கும் 


அவனையும்

ஒழிப்பது  சரியா ?

நெறியா?


அறம் -

மனிதத்தின் அடிப்படை ப் 

பண்பு

மார்க்கத்திற்கு  மார்க்கம் 

மாறும் விழுமியமன்று !


" மற த்திற்கும் 

அன்பே துணை" 


கொல்லும் சினம்

 கொள்கையாக 

 கோலோச் சும்

 அதிகாரம்   !


சகிப்பின்மை சக்கரத்தில்

 திசை திருப்பும் 

ஆயுத பலத்தில்

 நியாயம் பேசும்


 உலகம் 

பேச்சளவில் 

உதட்டளவில்


உண்மை தடுமாறும் 

மன்றங்களில் 

மல்லாடும் 


அடுக்கடுக்காய் 

உயிர்கள்

பலியாகும்


வறண்ட தேசம்

நிறம் மாறும்

செம்புலம் சேர்க்கும்


நொடி தோறும் 

வெறி

வெடியில் 

நெறி பிறழும்.........


No comments: