Thursday, November 9, 2023

 மனிதம் இருக்கிறதா?

கேள்வி எழும்

ஒவ்வொரு முறையும்

பிஞ்சுகள்

உதிரும் போது

கந்தக நெடியில்

கால வெளியில் 

கரை கடந்து

நுரை பொங்கிடும்

பகை யுணர்ச்சி! 

நெருக்கிடும் போராட்டம்

எல்லைச் சிறைகள்

தாண்டி

உலுக்கிடும் 

ஆதிக்க சக்திகளை 

மார்க்கம் யாவும்  நேயமே ?

No comments: