நியதி, நீதி
எ வருக்கு ?
அடிப்பவனுக்கு
இல்லை
பட்டவனுக்கே
சொந்தம்
வலியும், கிலியும்
துன்பமும், துயரமும்
இருந்த இடம் இழந்த போதும்
இருக்கும் இடம் போதும் போதும்
மறைந்த இடம் மறந்த போதும்
மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்
காலியான வாழ்க்கையில் கூலியாக
குண் டி நனைந்தால் போதும் போதும்
துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்
சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்
அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்
இல்லை
ஒருக்களித்தே ஒண்டி வாழும்
புலமும் புழுதியாயிற்றே!
போரின் பிடியில்
ஊரும் உறவும் சிதைந்து
இயற்கையின் இறக்கமும்
எட்டிப் போக
வன்மம் கோ லோ ச்ச
வக்கிரம் உக்கிரம் அடைய
வாய்மூடிடும் உலகம்
வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்
நிவாரண பதாகை ஏ ந்தி
நித்தில ஊர்வலம்
No comments:
Post a Comment