உதவி என்று வருகிறார்
பெறுகிறார்
சிக்கல் தீர்த்துக் கொள்கிறார்
கோருகிறார் பெறுகிறார்
சிரமம் தீர
சில காலம் முன்னோட்டம்
அடிக்கடி வருகிறார்
ஒத்தாசை நல்கி
ஒட்டி விடுகிறார்
வேலை முடிந்தது
இனி என்ன என்று
எட்டி விடுகிறார்
கரடி விடுகிறார்
காரணம் அடுக்கி
நலக் கேடு என்பார்
யாத்திரை என்பார்
வேண்டுதல் என்பார்
திரள் கிறது என்பார்
தீர்ந்தது என்பார்
கெடுவில் வாழ்வார்
கேடு மனிதர் பாடே
இப்படி.........
No comments:
Post a Comment