Thursday, November 3, 2022

பருவ மழை

 பருவ மழை பலமாய் 

வளம் அளிக்க வகையாய்

தவிக்கும் சாலைகள்  

தடுமாறும் சாக்கடைகள் 

படகாகும் வாகன ங்கள் 

குள ங்களைத் தேடும் நீரோட்டம் 

தேம்பி அழும் குழந்தை போல் 

தெருவில்

வாய்க்கால்கள் கால்வாசி 

முகவரி  இழந்த அஞ்சலாய்  

கண்மாய்கள் மனைகளாய்

இழந்த தேசமாய் ஏரிகள்

 உறவைத் தொலைத்து 

கழிந்த ஒற்றைப் பனை யாய் 

தாங்கும் திறன் குறைந்து 

தவிப்பில்  தள்ளாடும் 

துணை தேடி ஊருக்குள் 

வழமையாக ஆலோசனை

தயாரிப்புகள்  தேர்விற்கு

முதல் நாள் முடுக்கமாய் 

முணகிடும் மக்கள்

 முடக்கத்தில் 

No comments: