Thursday, January 17, 2008

காவல் துறை ஊழல்- 2

தமது நலன்களுக்காக அரசியல் தலைமை தவறான அதிகாரிகளை உயர்ந்த காவல் துறை பதவிகளில் அமர்த்தி காரியம் சாதித்துக் கொள்கிறது.பொதுவாக ஊழல் என்பது, இலஞ்சம் வாங்குவது,பண பரிவர்த்தனை அல்லது தப்பு செய்பவர்களுக்கும் காவல்துறை அகிகாரிகளுக்கும் இடையில் நிகழும் மதிப்பு மிக்க பொருள் கை மாறுவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது ஆகும்.


இதர குற்றங்கள் போலி மோதல் கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்,காவல் குற்றங்கள்,வதை செய்தல் தொடங்கி கள்ளத் தனமாக ஆயுதங்கள் பயன்படுதுவது முதலியனவாகும்.


அதிகப்படியான ஊதியம்,மேம்படுத்தப்பட்ட பயிற்சி, போன்ற ஊழலை போக்கும் வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தியும் ஊழல் ஒழிந்த பாடில்லை.உள்துறை அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 67% சத வீதத்திற்கு மேல் காவல் துறைக்கு செலவு செய்யப்பட்டாலும், அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நடத்தையியல் மற்றும் மனப்போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


இத்தொகை அல்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக காவல்துறை நவீன மயத்திற்காக உரு. 800 கோடிக்கு மேல் மாநிலங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் காவல் அணிகளில் எந்த மட்டத்திலும், நடத்தையியல் முன்னேற்றமும் அரிதாகவே உள்ளது.


ஒரு வகையில் காவல் துறை ஊழலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால்,அதன் செயல் மனித உரிமைகள் மீறலே ஆகும். தற்பாதுகாப்பு என்பது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. மேலும், காவல் பாதுகாப்புகள் அதிகரிப்பு, தவறான காவல் துறை வழக்குகள் என்பது அரசியல் சட்டம் பிரிவு 21ன் கீழ் உறுதி செய்துள்ள குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது ஆகவும் அமைகிறது.


போலி மோதல் குற்றங்கள் அதிகரிப்பு, அதிகரித்து வரும் சிறைச்சாலை மரணங்கள் தேவையற்ற, காலதாமதமாகும் புலனாய்வுகள்,குடிமக்களிடையே பாதுகாப்பற்ற சுழலையும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலையும் மிகவும் அதிகரித்து உள்ளது.


No comments: