Thursday, February 7, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை:

24, நவம்பர், 2007- கவுகாத்தியில் கற்பழிக்கப்பட்ட மனித சமுதாயம்

20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஒரு பெண் பலவந்தமாக நெடுஞ்சாலையில் ஆடை அவிழ்க்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார். சுமார் முன்னூறு பேர் காயம் அடைந்தனர். அதில் 10பேர் நிலை கவலைக்கு இடமாக உள்ளது.45 போராட்டக்காரர்கள் காணாமல் போயினர்.
இவை யாவும் குல், சந்தால், முண்டா ஆகிய பழங்குடியினர்-அசாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வரும் ஆதிவாசிகள் சமுதாயம் ஆகும்.

இவர்கள் 24, நவம்பர், 2007ல் திச்பூர், கவுகாத்தி பகுதியில் அரசு செயலகத்தை நோக்கி தமது நீண்ட நாள் கோரிக்கையான, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை ஊர்வலம் சென்றனர்.வழியில் ஊர்வலத்தினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டு, சட்டமன்ற விடுதியின் கடைசி வாயில் அருகே உள்ள கடைகள், வாகனங்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.பாத சாரிகள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

சில உள்ளூர்வாசிகள் பழிக்கு பழியாக, ஆதிவாசிகளுக்கு பாடம் புகட்டும் முறையிலே, மனிதாபிமானம் மறந்து, வெறி கொண்டு, உள்ளே உறையும் மிருகம் , மிருகத்தனமாக, அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், அவர்கள் உடல்களை எட்டி உதைத்து மகிழ்ந்தனர்.

No comments: