Sunday, February 17, 2008

ஒழுங்காகுமோ?

இனம் அழிகிறது!
இன்றும் அன்றும்!
இலங்கையில்!

ஏன்? என்று கேட்பார்
இல்லை!
இங்கே!

நீ யார்?
உமக்கு அவர்
சொந்தம் இல்லையா?
பந்தம் தொல்லையா?

அடுத்தவர் உரிமைக்கு
விழா எடுக்கும்!
உம் முகம்!
பார்த்துக் கொள்
பளிங்கில்!

உலகத்திற்கு
உன் ஆதரவு!
உன் உறவுக்கு!
முகம் காட்ட,
தயக்கம் ஏன்?

தடை ஆயிரமாயிரம்!
சமாதானம்
ஆகாது!

உன் தடை!
உள் தடை!
உணர்ந்து கொள்!

நாம் அடித்தால் அநியாயம்!
அவன் அடித்தால் நியாயம் !
எப்படி?

உம்மவர் குழந்தைகள் உயர்ந்தவர்!
எம்மவர் குழந்தைகள் தாழ்ந்தவர்!
சமமற்ற போராட்டம்!
யார் பக்கம் நீ?

மனசாட்சியே!
உலக சாட்சியே!
உறங்கலாமா?

ஒரு கண் பார்வை
ஒழுங்காகுமோ?

No comments: