நன்றாய் எழுது வோரும், நாட்டு நடப்பு, உலக நடப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் எண்ணங்கள், சரியான கண்ணோட்டத்தில் அமைவதில்லை.
படைப்பிலக்கியம் குறித்த புது உத்திகள், புனைவுகள் புதுக்கிடும் பேனா முனைகளும் சறுக்கி சாளர காட்சி களாய்.
அறிவியல் பார்வை ,சமூக இயக்க நிகழ்வுகள் அலசலுக்கு அந்நி யமில்லை, அயன்மை இல்லை என்று அறியாதவர்கள் அல்ல.
ஆயினும், நாட்டிடை அரசியல் நகர்வுகள், பூகோள போக்குகள் குறித்த ஆய்வுணர்வு, ஆழமற்ற அங்கலா ய்ப்புடன், ஒரு சார்பில் வெளியேற்றம் .
வெகு மக்கள் ஊடக காட்சியிலும், கருத் திலும் உள் நோக்கில், தீர்மானிக்கப்பட்ட நிரல் ஏற்பாட்டில் .நிமிட ந் தோறும் நிகழ்ச்சிகள் அலைவரிசை யாய்.
ஆட்சியதிகார ஆதரவு பிரச்சார பீ ரங்கிகளாய், மென் குண்டுகள் கருத் தேற்ற மாய் ;சமூகத்தின் உளவியல் கட்டமைப்பில்; ஓய்வின்றி கடிகார முள் போன்று, இயங்கும்.
புற நிலை செல்வாக்கில் பொழுதுகள் புலரும்.பொய் , புனைவுகள் பிடியில் பிரியத்துடன் கடந்திடும் காலம்.
அக நிலை ஆய்வு ஒத்தி வைத்து, அர்த்தம் தேடும் வெளியில், செல்வாக்கில் சாய்ந்து .
No comments:
Post a Comment