பிளந்த நிலம்
குலைந்த கட்டடங்கள்
தவித்த உயிர்கள்
நொடியில் பொடியாகி
வெடிப்பில் புதைந்தன
அரசும் அதிகாரமும்
ஆளாய்ப் பறக்க
ஆ க்கினை செய்திட
அணுகவும் அச்ச த்தில்
திகைப்பில்,
திகிலின் பிடியில்
ஆயிரக்கணக்கில்
" தாயின் மடியில்"
குழந்தையாய்.
நிலத்தாய் கரம் நீட்டி
தன்னுடல் சேர்த்தது
குற்றுயிரும் , குலை உயிருமாய்
சிரியாவில், துருக்கியில்
மனித சோகம்
மலை உயரமாய்
நினைவும் , கன வாய்
கை நழுவி
இதுவும் செய்தியாய்
வழக்கமான
ஏற்பாடுகளில்
கற்ற பாடம்
கற்கும் பாடம்
கால வெளியில்
கானல் வரியாய் ........
No comments:
Post a Comment