புசுகர் ராசு மற்றும் சோபா சர்மா
மோதல் சாவு போர்வையில், காவல் துறையினரால் இரண்டு வியாபாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், பத்து காவலர்கள் குற்றவாளிகள் என அண்மையில் தில்லி உயர்நீதி மன்றம தீர்ப்பளித்தது. இது, பெருகிவரும் மோதல் கொலை கலாச்சார பிரச்சனையை, சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளது. மோதல் சாவுகள் குறித்து பொது மக்கள:' இது காவல் துறையின் வழக்கமான, அவசியமான நடவடிக்கைகள் ஆகும் என்பது'.
மோதல் சாவு் குறித்து, காவல்துறை தீர்மானிக்கும் அதிகாரம் குறித்து, ஆய்வு செய்திட தீர்மானகரமான ஏற்பாடுகள் இல்லை.போலி மோதல் சாவுகள குறித்து எழுப்பப்படும் புகார்கள் குறித்தும புலன் விசாரணை செய்திட,சுயேச்சையான ஏற்பாடும் இல்லை என்பதே, நிலையை மிகவும் அபாய கட்டத்திற்கு தள்ளி உள்ளது எனலாம்.
வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் சகசித்சிங், புதுதில்லியில் நடு நாயகமான இடத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கண்டனக் குரலை எழுப்பியது. எழுந்த நெருக்கடியின் காரணமாக காவல்துறை ஆணையர் பதவி விலக நேரிட்டது. கொலை வழக்கு சி.பி.ஐ'ன் விசாரணைக்கு அளிக்கப்பட்டது.
பலியானவர்களின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள். இதன் காரணமாக வழக்கு முடிய பத்தாண்டுகள் ஆகியது என்றாலும், வழக்கத்திற்கு மாறான மன உறுதியுடன் வழக்கினை நடத்தினர். என்றாலும், பெரும்பான்மை வழக்குகளில் காவல்துறை வாதங்களை ஊடகங்களும், பொதுமக்களும், அவர்கள் கூற்றுப்படியே ஏற்கின்றனர்.
தில்லி கோனாட் பகுதி மோதல் கொலையிலும், காவலர்கள் தற்காத்துக் கொள்ள திருப்பிச் சுட்டதின் காரணமாகவே அவர்கள் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், கொலை செய்யப்பட்டவர்கள் உடல் அருகே பழைய துப்பாக்கியை வைத்து தடயங்களை மாற்றினர்.எனினும் அவர்கள் சொல் எடுபடவில்லை.
அதிகரிக்கும் போக்கு
அண்மைக் காலமாக மோதல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரப்படி (சம்மு காசுமீர் தவிர்த்து) 2002--03ல் 83 பேர் கொல்லப்பட்டனர்; 2003-௨004ல் 100 பேர் கொல்லப்பட்டனர்; 2004- 2005ல்-- 122பேர் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இக்காலக் கட்டத்தில் 41, 48, 66 கொலைகள், காவல் துறையால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் 41 பேரும் கொல்லப்பட்டனர். அமைதியான மாநிலமான உத்தரக்கண்டும் 12 மோதல் கொலைகளை நிகழ்த்தி தம் கடமையை நிறைவேற்றியுள்ளது.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை - மொழியாக்கம்
No comments:
Post a Comment