Saturday, August 29, 2009

அவா!

ஓடிய கால்கள்
ஓய்வு கொண்டன,
ஓயாத வாய்
மெளனம் காத்தது.

காட்சிகள் தேடிய
மாட்சி,
இமைகள் மூடி
இறுக்கம் சேர்த்தது.

இதய சுழி
தாளம் சோர்ந்தது,
எண்ண ஓட்டம்
ஏக்கம் சேர்த்தது.

மருத்துவம்,,
இதற்கு மேல் கைவிரித்தது,
அதையும் தாண்டி
இயக்கம்,
அவாவுடன்.......

No comments: