Sunday, January 10, 2010

இல்லை!

இருந்த போதும்
இறந்த போதும்
துடித்த
உணர்வு
ஏங்கிய
உயிர்

நாடிய கண்கள்
நலம் குறைந்த போதும்
படுக்கையாய்
கிடந்த வேளையும்

உள்ளம்
உடுக்கையாய்
ஒலி எழுப்பி
உறவைத் தேடிய
சொந்தம்

உந்தன் தொடர்ச்சி
ஒப்புக்கும் இல்லை!
உப்புக்கும் இல்லை!

No comments: