(காதல்- வில்லியம் சேக்சுபிரியர்-
மொழியாக்க முயற்சியில் அடுத்த அடி)
கற்பனை ஊறும் இடம் எங்கே
எம்மிடம் கூறு,
நெஞ்சத்திலா அன்றி நினைவிலா?
எங்ஙனம் பிறந்தது,
எவ்விதம் ஊட்டம் அடைந்தது?
பதில் கூறு, பதில் கூறு.
அது விழிகளில் விளைகிறது,
உற்று நோக்கில் உண்டு;
கற்பனை வீழ்கிறது,
தொட்டிலில் கிடக்கிறது.
வாரீர்! கற்பனை வீழ்ச்சியின்
மணி ஒலிப்போம்:
தொடங்குகிறேன் நான், - டிங், டாங்
அனைவரும்.
டிங், டாங்.
No comments:
Post a Comment