எவன் செத்தால் என்ன?
எவை அழிந்தால் என்ன?
எங்கள் வியாபாரம்
செழித்தால் போதும்
எங்கள் கருவூலம்
நிறை ந்தால் போதும்
கொல்லும் வணிகம்
வன்மம் கொண்டு
வெறி யாட்டு
ஒற்றைத் துருவ அதிகாரம்
சுரண்டிய தேசங்களின் கூட்டில்
வளங்களை கொள்ளை கொள்ளும்
அறியாமையில் அடுத்த வீட்டுக்காரன்
எதிரியாய், பகைவனாய்
வீ ழ்ந்திடும்
ஆயுதங்களின் அரசியலில்
அமைதியும் அச்சத்தில்
அச்சு கழன்று
மச்சி நாடுகளின்
எடு பிடியாய்
ஏதிலியாய்
பிறந்தகம் துறந்து
No comments:
Post a Comment