Tuesday, May 27, 2008

பரிதாபம் பழங்குடி!

போராடும் குச்சார்
உரிமை கோரி!
மீண்டும் உயிர் கொடுக்கிறார்!
துப்பாக்கி குண்டுகளுக்கு
இரையாகி!
துணிவை மட்டும் முன் நிறுத்தி!

காவி அரசியல்
களம் இறங்கி!
படை பலத்துடன்
பழங்குடி இன உரிமை மறுத்து!
பலி கொள்கிறது!
பதவி சுகத்திற்காக!

வாக்குறுதியைக் காப்பாற்றாத
வாக்கு வங்கி அரசியலில்!
அடுத்த கட்ட அரசியலுக்கு
அணி வகுத்து!
தில்லியில் ஆலோசனை!
இராணுவத்தை வரவழைக்க!
சுற்றி வளைக்க!

சொன்னதைச் செய்யாதவர்!
குட்டை அரசியலில்
ஊறும் மட்டை அரசியல்!

குச்சார் இன மக்களுக்கு
மீண்டும் மொட்டை!
அடுத்த தேர்தலைக்
காட்டி!

ஒதுக்கீடு ஒதுக்கி வைப்பு!
பதுங்கி கூட்டம்!
பற்றி எரியும் பிரச்சனை!
பரிதாபம் பழங்குடி!
இராசசுத்தானில்!

No comments: