Thursday, May 29, 2008

நீ ஏன்?

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்
அப்போது!
பறித்துக்கொண்டான்
அப்போது!
செரித்துக் கொண்டாய்!

போட்டான் அவிழ்த்தான்!
மீண்டும் அழைப்பு!
அந்திமக் காலத்தில்!
அங்கீகாரம் கோரி!
அகங்காரம் அகன்ற
நிலை!

ஏற்றுக் கொண்டாய்!
கழற்றியதை
இறக்கினார்!
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!
ஏக்கத்துடன்!

தேம்புகிறாய்! புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப் போல்!

அவளே அழவில்லை!
நீ ஏன்?

அவளே கலங்கவில்லை!
நீ ஏன்?

அவளே விழையவில்லை!
நீ ஏன்?

அவளே விழித்திருக்கவில்லை!
நீ ஏன்?

அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்?

அவளே இயல்பாய்!
நீ ஏன்?

No comments: