1982ல், 'அடிப்படை மனித நேய' மாத இதழ் தலையங்கத்தில், மக்கள் சிவில் உரிமைக் கழக உறுப்பினர்களிடையே அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு சில மாதங்களுக்கு முன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் சி.எப்.டி. இந்திய அளவில் மாநாடு ஒன்றை, அய்தராபாத் நகரில் நடத்தினர்.
இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சிக்கலில் இது போன்ற சிவில் உரிமைக் குழுக்களுடன் இணந்து செயல்படுவது, சமூக மட்டத்திலும், அமைப்புகளின் சிவில் உரிமை ஆகியவற்றைக் காத்திட, மிகவும் அவசியம் ஆகிறது என்று தலைவர்களிடையே, உணரப்பட்டது.
இவை போன்றதொரு மாநாடு, மாநில அளவில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சில மாநாடுகளில் தார்குண்டே அவர்களும் கலந்து கொண்டது குறிப்பானது ஆகும்.
1982ல் மகாராட்டிர மாநிலம் துலியாவில், உடமைகள் இழந்து, பொருளாதார நிலையில் நலிவுற்ற மக்களுக்காக பாடுபடும் ஒரு குழு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், நானும் அவரும் கலந்து கொண்டோம். தமது 75 அகவையிலும் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment