Sunday, November 30, 2008

மார்கழி....

நிர்வாணம் தந்தே
பழக்கப்பட்ட எங்களுக்கு
நிவாரணம்
எவ்வாறு ?

மழை, வெள்ளம்,
மின் விநியோகம்,
குடி தண்ணீர் இன்மை,
வீடு இழப்பு,

வேலை இழப்பு,
காலியான கிராமம்,
கால் நடை பாதிப்பு,
மக்கள் பாதிப்பு.

ஆண்டுதோறும்
வருவது தான்,
இவ்வாண்டும்,
ஆய்வுக்குழு

வழக்கம் போல்
பத்திரிக்கைச் செய்தி,
படச்செய்தி,
வண்ணச்செய்தி.

நாள்தோறும் கட்சிகள்
கருத்துரை,
ஆட்சியின் மறுப்புரை
வழக்கம் போல்

கிலோ அரிசி,
மண்ணெண்ணய்,
மருத்துவ முகாம்
பெட்டிச் செய்தி,

பிறகென்ன
மார்கழி....

No comments: